tamilni 25 scaled
இலங்கைசெய்திகள்

போராட்டத்தில் குதிக்கும் மின்சார ஊழியர்: அரசிற்கு கடும் எச்சரிக்கை

Share

மின்சார சபை ஊழியர்கள் மூன்று நாள் மாபெரும் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக இலங்கை மின்சார ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான உத்தேச சட்டமூலத்திற்கு எதிராக நாளை (03.01.2024) முதல் போராட்டம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக சங்கம் தெரிவித்துள்ளது.

குறித்த தகவலை இலங்கை மின்சார ஊழியர் சங்கத்தின் பிரதம செயலாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், உத்தேச சட்டமூலத்தை உடனடியாக மீளப் பெற்றுக் கொள்ளுமாறு மின்துறை அமைச்சருக்கு அறிவிக்கவுள்ளதாக பிரதம செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் சபையை ரணிலுடன் சேர்ந்து விற்க கஞ்சன விஜயசேகர விரும்புகிறார். இதை நாடாளுமன்றத்தில் தன்னிச்சையாக நிறைவேற்றினால் இலங்கை மின்சார சபையில் பாரிய வேலை நிறுத்தம் மேற்கொள்ளப்படும்.

எனவே, இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்திற்கு முன்பாக மூன்று நாட்களுக்கு மாபெரும் போராட்டம் நடத்த ஏகமனதாக தீர்மானம் எடுத்துள்ளோம்.

கஞ்சன விஜயசேகரவுக்கு பகிரங்க சவால் விடுகிறோம் என தெரிவித்துள்ளார். முடிந்தால் இதை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வாருங்கள்.

அன்றைய தினம் இலங்கை மின்சார சபை ஊழியர்கள் அனைவரையும் கொழும்புக்கு வரவழைப்போம் வரவழைப்போம் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...