trudeau singh
உலகம்செய்திகள்

கனடாவின் உயரிய அங்கீகாரத்தை பெறும் இந்திய தொழிலதிபர்: யார் இவர்?

Share

கனடா நாட்டின் உயரிய அங்கீகாரங்களின் ஒன்றான ‘Order of Canada’ பதவியை இந்திய தொழிலதிபர் ஒருவர் பெறுகிறார்.

இந்தியாவில் பிறந்த பிர்தௌஸ் கராஸ் (Firdaus Kharas) என்ற தொழிலதிபர் கனடா நாட்டின் உயரிய பதவியான ‘ஆர்டர் ஆஃப் கனடா’ அதிகாரி பதவியில் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இவருக்கு, மனிதநேயத்தை மையமாக வைத்து ஊடக செயல்பாட்டின் மூலம் சமூக மாற்றத்தை விதைத்ததற்கு இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கனடா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடா நாட்டின் உயரிய அங்கீகாரங்களின் ஒன்றான ‘Order of Canada’, மிக சிறப்பாகவும், நீடிக்க கூடிய பங்களிப்புகளை ஆற்றியவர்களுக்காகவும் வழங்கக்கூடியது.

கனடா நாட்டின் கவர்னர் ஜெனரல் மேரி சைமன், உயர்மட்ட அதிகார குழுவுக்கு 15 அதிகாரிகள், ஒரு கௌரவ அதிகாரி, 59 உறுப்பினர்களை நியமனம் செய்த அறிவிப்பை வெளியிட்டார்.

இது தொடர்பாக பிர்தௌஸ் கராஸ் கூறுகையில், “கனடா நாட்டின் இந்த அங்கீகாரத்தை பெறுவதில் நெகிழ்ச்சியடைகிறேன். கனடாவில் குடியேறிய எனக்கு இந்த பதவி அர்த்தம் நிறைந்ததாக உள்ளது.

பார்ஸி சமூகம் சாதிக்க கூடியதாகா உள்ளதால், இன்னும் நிறைவளிக்க கூடியதாக உள்ளது” என்றார். பிர்தௌஸ் கராஸ் ஒரு அனிமேஷன் மற்றும் படங்கள் சார்ந்த தயாரிப்பாளர் ஆவார்.

இவரது படைப்புகள் இந்தியா உள்பட 198 நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், 125 -க்கும் மேற்பட்ட விருதுகளை இவர் பெற்றுள்ளார்.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...