OIP 12
உலகம்செய்திகள்

உயிர் உறையும் குளிர்… விமான சக்கரத்தில் ஒளிந்திருந்து பயணித்த இளைஞர்: பதறவைக்கும் சம்பவம்

Share

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விமானத்தின் சக்கரத்தில் ஒளிந்திருந்து பயணித்த இளைஞர் ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அல்ஜீரியா நாட்டில் இருந்து புறப்பட்ட அந்த விமானம் சுமார் இரண்டரை மணி நேர பயணத்திற்கு பிறகு பிரான்ஸின் பாரிஸ் நகர விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.

இந்த நிலையில் தொழில்நுட்ப சோதனைகளின் போது உயிருக்கு ஆபத்தான நிலையில், அந்த இளைஞரை மீட்டுள்ளனர். அந்த இளைஞருக்கு வெறும் 20 வயதிருக்கலாம் என்றும், ஏர் அல்ஜீரி விமானமானது அல்ஜீரியாவின் ஓரான் நகரத்தில் இருந்து புறப்பட்டுள்ளது என்றும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், தொடர்புடைய இளைஞரை அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாக அனுப்பி வைத்துள்ளனர். அந்த இளைஞர் உயிருக்கு ஆபத்தான நிலையிலேயே மீட்கபட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் சுமார் 30,000 முதல் 40,000 அடி உயரத்தில் பறக்கும் போது வெப்பநிலை -50 C முதல் -60 C வரையில் சரிவடையலாம் என்றும், அதுபோன்ற மிக மோசமான நிலையை, விமான சக்கரத்தில் ஒளிந்து பயணிக்கும் நபர்கள் எதிர்கொள்ள நேரிடும் என்றும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

1947 முதல் 2020 வரையில் உலகெங்கும் இதுபோன்று 128 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமெரிக்காவின் FAA என்ற அமைப்பு குறிப்பிட்டுள்ளது. இதில் 75 சதவிகித பயணிகள் மரணத்தை தழுவியதாகவே கூறப்படுகிறது.

2019ல் இதுபோன்று விமான சக்கரத்தில் ஒளிந்திருந்து பயணித்த ஒருவர், பறக்கும் விமானத்தில் இருந்து சடலமாக தென்மேற்கு லண்டனில் ஒருவரது வீட்டு தோட்டத்தில் விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

தற்போது பாரிஸ் நகர விமான நிலையத்தில் மீட்கப்பட்ட இளைஞர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவரது நிலை தொடர்பில் மேலதிக தகவல் ஏதும் வெளியாகவில்லை என்றே கூறப்படுகிறது.

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...