maxresdefault scaled
உலகம்செய்திகள்

நிவாரண உதவி வழங்கும் போது மயங்கி விழுந்த நடிகர் டி.ராஜேந்தர்: அதிர்ச்சி சம்பவம்

Share

நிவாரண உதவி வழங்கும் பொழுது நடிகர் டி.ராஜேந்தர் மயங்கி விழுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த டிசம்பர் 17, 18ம் தேதிகளில் திருநெல்வேலி, தூத்துக்குடி உட்பட தென்மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

லட்சக்கணக்கான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தை இழந்தனர். வீடுகள், விவசாய பயிர்கள் கடுமையாக சேதமடைந்தன.

இன்று நெல்லை மாவட்டத்தில் நடிகர் விஜய் 1,500 பேருக்கு நிவாரண உதவி வழங்கினார். அதேபோல், நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தரும் இன்று தூத்துக்குடியில் நிவாரண உதவிகள் வழங்கினார்.

தொடர்ந்து, தூத்துக்குடி லெவிஞ்சிபுரம் பகுதியில் இன்று பிற்பகல் 3 மணி அளவில் நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார்.

அப்போது, திடீரென மயக்கம் அடைந்து சரிந்து விழுந்தார். இதனால், பதற்றமான அவரது ரசிகர்கள், டி.ஆரை அருகில் இருந்த இருக்கையில் அமர வைத்தனர்.

பின்னர் முகத்தில் தண்ணீர் தெளித்து அவரை மயக்கத்தில் இருந்து மீட்டனர். இதையடுத்து, அவரை பத்திரமாக காரில் அழைத்துச் சென்றனர்.

Share
தொடர்புடையது
ATSB
உலகம்

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள் – பயணிகளின் நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் !

இன்று காலை, சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும்...

tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...

pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...