kaje
இலங்கைசெய்திகள்

தமிழ் கைதிகளுக்கு பாலியல் சித்திரவதை! – சபையில் கஜேந்திரன்

Share

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு சிறைச்சாலைகளில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் பாலியல் ரீதியான சித்திரவதைகளுக்கு உட்படுகின்றனர்.

இவ்வாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற அமர்வில் தெரிவித்துள்ளார்..

2009 ஆம் ஆண்டளவில் பொய்யான குற்றச்சாட்டுக்களை சுமத்தி கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளே இவ்வாறு சித்திரவதைகளுக்கு உட்படுகின்றனர்.

தமிழ் இளைஞர்களின் அந்தரங்க உறுப்புக்கள் மிகக் கேவலமான முறையில் சோதனை செய்யப்படுகின்றன எனவும் இதுவொரு பாலியல் சித்திரவதை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அநுராதபுரம் சிறைச்சாலை சென்று தமிழ் அரசியல் கைதிகளிடம் வெறியாட்டம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். தமிழர்கள் என்ற ஒரே காரணத்துக்காகவே பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் தமிழ் மக்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் இதுவரை லொஹான் ரத்வத்த புரிந்த குற்றச்சாட்டுக்களுக்கு அவரின் மற்றைய அமைச்சுப் பதவிகள் பறிக்கப்படவில்லை.அவரிடமிருந்து அனைத்து பதவிகளும் பறிக்கப்பட்டு நாடாளுமன்றிலிருந்து அவரை வெளியேற்றி சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும்.

பயங்கரவாதத் தடைச்சத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட 12 தமிழ் இளைஞர்கள், கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 26ஆம் திகதி அந்த சிறைச்சாலைக்குக் கொண்டுவரப்பட்ட இந்த இளைஞர்களை 29ஆம் திகதி நிர்வாணமாக்கி சோதனையிட்டுள்ளனர்.

540 நாள்களாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள இவர்களை பல்வேறுவிதமான கொடூர சித்திரவதைகளுக்கு உள்ளாக்குகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 3 1
உலகம்செய்திகள்

ஜெர்மனியில் அதிர்ச்சி: மருத்துவமனையில் பணிச்சுமை காரணமாக 10 நோயாளிகளைக் கொலை செய்த ஆண் தாதிக்கு ஆயுள் தண்டனை!

ஜெர்மனியில் உள்ள ஊர்செலன் (Ürselen) நகரில் உள்ள மருத்துவமனை ஒன்றில், 2020ஆம் ஆண்டு பணியில் சேர்ந்த...

images 4 1
செய்திகள்இந்தியா

தமிழ்நாடு இலங்கைத் தமிழர்களுக்கு உடனடியாக வாக்களிக்கும் உரிமை மற்றும் குடியுரிமை வழங்கு: மத்திய அரசுக்கு எஸ். ராமதாஸ் வலியுறுத்தல்!

தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வாழ்ந்து வரும் இலங்கைத் தமிழ் ஏதிலிகளுக்கு (Refugees) வாக்களிக்கும் உரிமை மற்றும்...

MG 8826
இலங்கை

கிளிநொச்சியில் மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை இராணுவம் விட்டு வெளியேற ஜனாதிபதி உத்தரவு – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்!

இராணுவ ஆக்கிரமிப்பில் உள்ள மாவீரர் துயிலும் இல்லக் காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதி அநுர...

25 6909cc0a3b1bf
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சங்குப்பிட்டி கொலை: பிரதான சந்தேகநபர் தவில் வித்துவான் அல்ல – இசை வேளாளர் இளைஞர் பேரவை விளக்கம்!

பூநகரி – சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் பெண்ணொருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்துடன் கைது செய்யப்பட்ட பிரதான...