tamilnif 26 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டில் 77 சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் செயலிழப்பு

Share

நாட்டின் கரையோரப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் செயலிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அந்த அறிவிப்பில் 77 சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் செயலிழந்த நிலையில் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில்,

செயலிழந்த 77 கோபுரங்களில் 11 எச்சரிக்கை கோபுரங்கள் பேரிடர் மேலாண்மை மையத்திலிருந்தும் 9 எச்சரிக்கை கோபுரங்கள் கீழ் மட்டத்திலிருந்தும் செயல்படுத்த முடியும் என கூறப்பட்டுள்ளது.

எனினும் மற்றைய 57 எச்சரிக்கை கோபுரங்கள் முற்றிலும் செயலிழந்த நிலையிலுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், எச்சரிக்கை கோபுரங்களுக்கான தொழில்நுட்ப நிபுணத்துவம் அமெரிக்க சமிக்ஞை நிறுவனம் ஒன்றிடம் வழங்கப்பட்டு வந்தது.

எனினும் பின்னர், பேரிடர் முகாமைத்துவ மையத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் மாவட்ட அளவில் பொலிஸ் மற்றும் இராணுவம் பொறுப்பேற்றுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...

Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...