tamilnif 26 scaled
இலங்கைசெய்திகள்

நாட்டில் 77 சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் செயலிழப்பு

Share

நாட்டின் கரையோரப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் செயலிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

அந்த அறிவிப்பில் 77 சுனாமி எச்சரிக்கை கோபுரங்கள் செயலிழந்த நிலையில் காணப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் குறிப்பிடுகையில்,

செயலிழந்த 77 கோபுரங்களில் 11 எச்சரிக்கை கோபுரங்கள் பேரிடர் மேலாண்மை மையத்திலிருந்தும் 9 எச்சரிக்கை கோபுரங்கள் கீழ் மட்டத்திலிருந்தும் செயல்படுத்த முடியும் என கூறப்பட்டுள்ளது.

எனினும் மற்றைய 57 எச்சரிக்கை கோபுரங்கள் முற்றிலும் செயலிழந்த நிலையிலுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், எச்சரிக்கை கோபுரங்களுக்கான தொழில்நுட்ப நிபுணத்துவம் அமெரிக்க சமிக்ஞை நிறுவனம் ஒன்றிடம் வழங்கப்பட்டு வந்தது.

எனினும் பின்னர், பேரிடர் முகாமைத்துவ மையத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் மாவட்ட அளவில் பொலிஸ் மற்றும் இராணுவம் பொறுப்பேற்றுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ அதிகாரி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...