rtjy 106 scaled
இலங்கைசெய்திகள்

சுவிற்சர்லாந்திலிருந்து நாடுகடத்தப்படும் இலங்கையர்கள்!

Share

சுவிற்சர்லாந்திலிருந்து நாடுகடத்தப்படும் இலங்கையர்கள்!

கடந்த மாதம் மாத்திரம் சுவிட்சர்லாந்து அதிகாரிகள், இரண்டு ஈழத்தமிழ் குடும்பங்களை இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளனர்.

இந்தநிலையில் நாடுகடத்தலின் போது அதிகாரிகளின் தாக்குதலில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டதாக புலம்பெயர்ந்தோர் ஒற்றுமை வலையமைப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

நாடு கடத்தப்பட்ட தமிழர்களில் ஒருவர் எங்கிஸ்டீனில் உள்ள புகலிட முகாமில் இருந்து பொலிஸாரினால் அறிவிக்கப்படாமல் அழைத்துச் செல்லப்பட்டு, இலங்கைக்கு விமானத்தில் ஏற்றப்பட்டுள்ளார்.

சுவிஸ் தடுப்புக்காவலில் குறைந்தது மூன்று இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு, தமிழ் புகலிடக் கோரிக்கையாளர் நகுலேஸ்வரன் விஜயன் சுவிஸ் காவலில் வைத்து தன்னுயிரைப் போக்கிக்கொண்டார்;. 2022 பெப்;ரவரி 15 அன்று, நேசுராசா ராசநாயகம் சுவிட்சர்லாந்தின் கம்பெலன் முகாமில் மரணமான போதும் மரணத்துக்கான காரணம் கூறப்படவில்லை.

குடும்பத்தினரின் கோரிக்கையையும் மீறி அவரது உடல் சுவிட்சர்லாந்தில் தகனம் செய்யப்பட்டது.

2018 ஆம் ஆண்டில் 28 வயதான தமிழ் பெண் மரணமானார்; அதே ஆண்டு, ஜேர்மனி மற்றும் சுவிட்சர்லாந்தில் இருந்து நாடு கடத்தப்பட்ட தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கையின் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் கையளிக்கப்படடதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Share
தொடர்புடையது
18 18
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஆட்பதிவுத் திணைக்களத்தின் கணினி அமைப்பில் கோளாறு: நாளை சேவைகள் அனைத்தும் நிறுத்தம்!

ஆட்பதிவுத் திணைக்களத்தின் (Department of Registration of Persons) பிரதான கணினி அமைப்பில் ஏற்பட்டுள்ள திடீர்...

17 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புதிய பேருந்து கட்டண அதிகரிப்பு: நாளை முதல் வழக்கம் போல் பேருந்து சேவைகள்!

இலங்கையில் இன்று (மார்ச் 23, 2026) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்களை...

16 19
செய்திகள்உலகம்

கச்சா எண்ணெய் விலை அதிரடி வீழ்ச்சி: 100 டொலருக்கும் கீழ் சரிந்த பிரெண்ட் கச்சா எண்ணெய்!

ஈரான் மீதான திட்டமிடப்பட்ட இராணுவத் தாக்குதல்களை அமெரிக்கா அடுத்த 5 நாட்களுக்குத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக ஜனாதிபதி...

15 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – அவுஸ்திரேலியா உறவுகளை வலுப்படுத்த இணக்கம்: ஜனாதிபதியுடன் உயர்ஸ்தானிகர் சந்திப்பு!

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் பால் ஸ்டீபன்ஸ் (Paul Stephens) மற்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க...