WhatsApp Image 2021 09 20 at 18.40.11 scaled
செய்திகள்இலங்கை

மொட்டு வைரஸ் நாட்டுக்கு ஆபத்தானது! – மனுஷ நாணயக்கார

Share

கொரோனா வைரஸை விட மொட்டு வைரஸ் நாட்டுக்கு ஆபத்தானது. மொட்டு ஒரு வைரஸே. இந்த வைரஸ் காரணமாக நாட்டில் உள்ள மக்கள் நாட்டை விட்டு வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஆனால் செய்ய வேண்டியது இந்த நாட்டை நாசப்படுத்த முயலும் வைரஸை நாடு கடத்திவிடுவதாகும். இந்த நாட்டிலிருந்து மொட்டு வைரஸ் மற்றும் ராஜபக்ச வைரஸை ஒழிக்க நாம் கைகோர்க்க வேண்டும்.

இவ்வாறு ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

ராஜபக்‌ஷ வைரஸால் நாடு முழுவதும் மோசமாகிவிட்டுள்ளது. நாட்டை முடக்கி விட்டு பெரிய வணிகர்களும் தங்கள் கூட்டாளிகளுக்கும் அத்தியாவசிய பொருள்களை கொண்டுவர அனுமதித்துவிட்டு ஒரு பொருளாதார வைரஸை செயல்படுத்தியவண்ணமுள்ளனர்.

மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவார்ட் கப்ரால் நியமிக்கப்பட்டார். நிதிச் சட்டத்தின்படி, ஒரு அரசியல்வாதியையோ அல்லது நாடாளுமன்ற உறுப்பினரையோ இதற்காக நியமிக்க முடியாது. நாடாளுமன்ற உறுப்பினர், மற்றும் மொட்டுக் கட்சியின் ஸ்தாபக உறுப்பினர் ஆகியோர் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் சொத்துக்களை விற்கமாட்டோம் என்றே சொன்னார்கள். விற்றதை திரும்பப் பெறுவதாகக் கூறினார்கள். ஆனால் இவர்கள் வந்த நாளிலிருந்து நிலத்தை விற்று வருகின்றனர். தற்போது நாட்டில் உள்ள அனைத்து மின் உற்பத்தி நிலையங்களின் உரிமைகளையும் மூன்று நாடுகளுக்கு கையளிக்கும் நிலை ஏற்ப்படுத்தப்பட்டு வருகிறது.

எதிர்க்கட்சியாக நாங்கள் குரல் எழுப்புகிறோம்.இவை அனைத்தும் மக்களுக்கு தெரியாமல் ரகசியமாக செய்யப்படுகின்றன. நாடாளுமன்றத்துக்கு தெரியாமல் இரகசியமாகவே செயற்படுத்தப்படுகிறது. இந்த விடயங்களைப் பற்றி நாம் பேசினால், எம்மை ஒதுக்கி இழுக்கவே முயற்சிக்கிறார்கள்.

கொரோனா வைரஸை முன்னணியில் வைத்து தான் அரசாங்கம் தனது இருப்பை நிலைநிறுத்த முயற்சிக்கிறது. மின் உற்பத்தி நிலையங்கள் விற்பனைக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறோம். இந்த நேரத்தில் மக்கள் தங்கள் வயிற்றை இறுக்கிக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு என்னை வரச் சொன்னார்கள். ஆனால் அழைத்த காரணம் குறிப்பிடப்படவில்லை. ஒவ்வொருவரும் அழைக்கப்பட காரணம் கொடுக்கப்பட வேண்டும். ஆனால் அரசாங்கத்தின் ஆணவத்தால் தான் இந்த விடயத்தை குறிப்பிடாமல் சமூகமளிக்குமாறு சொல்கிறார்கள். நாம் பேசும்போது வாயை மூட வைக்கவே இவ்வாறு அழைத்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
121664732
இலங்கைசெய்திகள்

உயர்தரப் பரீட்சை மாணவி 3 மாடிக் கட்டிடத்திலிருந்து குதித்துத் தற்கொலை முயற்சி: அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி வைத்தியசாலையில் அனுமதி!

பம்பலப்பிட்டி பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில், இம்முறை உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவி ஒருவர் இன்று...

images 2 3
செய்திகள்இலங்கை

நினைவேந்தல் காணி விவகாரம்: இரு தரப்பினரும் ஒற்றுமையாக வாருங்கள்; இல்லையேல் நல்லூர் நிலம் வழங்கப்படாது – முதல்வர் மதிவதனி அதிரடி அறிவிப்பு!

நவம்பர் 27 நினைவேந்தல் நிகழ்வைக் கொண்டாடுவது தொடர்பாகக் கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இன்மையால், இரு தரப்பினருக்கும்...

bk7qlddg hamas afp 625x300 19 February 25
செய்திகள்உலகம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்: 15 பாலஸ்தீனிய உடலங்களுக்குப் பதிலாக மேலும் ஒரு இஸ்ரேலிய வீரரின் உடலை ஹமாஸ் ஒப்படைத்தது!

எப்போது வேண்டுமானாலும் முறியலாம் என்ற அபாயத்தில் இருக்கும் காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் அமுலாக்கம் தொடர்ந்து...

251107 Olivier Rioux ch 1044 acd69e
உலகம்செய்திகள்

7 அடி 9 அங்குல உயர கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ: உலகின் மிக உயரமான கூடைப்பந்தாட்ட வீரராக சாதனை!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா பல்கலைக்கழக கூடைப்பந்தாட்ட அணியில் இணைந்துள்ள கனேடிய இளைஞர் ஒலிவியர் ரியூ (Olivier Rioux),...