Pg 13 Arrr
செய்திகள்இலங்கை

மொட்டுக் கட்சிக்குள் மீண்டும் பனிப்போர்!

Share

அரச பங்காளிக் கட்சிக்குள் மீண்டும் பனிப்போர் மூண்டுள்ளது என தகவல்கள் கசிந்துள்ளன.

கெரவலப்பிட்டியவில் ஒரு பகுதியை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்கியமை தொடர்பில் அரசின் பங்காளிக் கட்சிகள் பல கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதில் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசு தேவ நாணயக்கார உள்ளிட்டோர் தலைமையிலான பங்காளிகளே, இவ்வாறு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் .

அத்துடன் கெரவலபிட்டிய மின் உற்பத்தி நிலைய விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமருடன் பேச்சு நடத்தவ ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான கூட்டணியில் அங்கம் வகிக்கும் 11 கட்சிகள் தீர்மானித்துள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கெரவலப்பிட்டி மின் உற்பத்தி நிலையத்தின் ஒரு பகுதியை அமெரிக்க நிறுவனத்துக்கு வழங்க எடுக்கப்பட்ட  தீர்மானத்துக்கே எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமன்றி கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்துக்கு நடந்த கதியே இங்கும் நடைபெறும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...