சுதேச வைத்தியத்துறையை மேம்படுத்த விசேட திட்டம்!
கிழக்கு மாகாணத்தில் சுதேச வைத்தியத்துறையை மேம்படுத்துவதற்கென விசேட வேலைத்திட்டம் ஒன்றை கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகம் மேற்கொண்டுள்ளது.
சுதேச வைத்தியத்துறையை மேம்படுத்துவதற்கென சுதேச வைத்திய நிபுணர்கள், சமயத் தலைவர்கள், சித்த வைத்தியர்கள் மற்றும் இளைஞர்களை உள்ளடக்கிய 20 பேர் கொண்ட விசேட குழுவொன்றையும் கிழக்கு ஆளுநர் நியமனம் செய்துள்ளார்.
இந்த வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதற்கும் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளுக்காகவும் 50 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் உள்ள சுதேச வைத்தியசாலையின் குறைபாடுகளை அவதானித்து அவற்றை முன்னேற்ற தேவையான ஆலோசனைகளையும் வழங்குமாறு அக் குழுவை கிழக்கு ஆளுநர் கேட்டுள்ளார்.
Leave a comment