rtjy 41 scaled
இலங்கைசெய்திகள்

கிரிக்கெட் மைதான ஊழியர்களுக்கு பரிசில் தொகை

Share

கிரிக்கெட் மைதான ஊழியர்களுக்கு பரிசில் தொகை

ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் போது வாக்குறுதியளிக்கப்பட்ட 50,000 டொலர்கள் விருது பணத்தை சிறிலங்கா கிரிக்கெட் சபை ஆர் பிரேமதாச சர்வதேச கிரிக்கட் மைதானம் மற்றும் கண்டி பல்லேகல மைதானம் ஆகியவற்றின் ஊழியர்களுக்கு விநியோகிக்க ஆரம்பித்துள்ளது.

இதன்படி, 2023 ஆசியக் கிண்ணத்தின் போது பணிபுரிந்த கொழும்பு ஆர் பிரேமதாச மைதான ஊழியர்களில் 138 பேரின் (நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்கள்) முயற்சிகளுக்கு வெகுமதி வழங்கப்பட்டதுடன், கண்டி மைதான ஊழியர்களில் 115 உறுப்பினர்கள் வெகுமதியை எதிர்வரும் 8 ஆம் திகதி வழங்கவுள்ளடாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இரண்டு மைதானங்களின் பணியாளர்களும் போட்டியின் போது பயிற்சி வசதிகள், வெளியக ஆடுகளங்கள், மைதானத்தை மூடுதல், வெளிக்கொணர்தல் மற்றும் தொடர்புடைய சேவைகளை உறுதிசெய்து, மோசமான வானிலை இருந்தபோதிலும், போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கான சிறப்பான சேவையை செய்துள்ளனர்.

இந்த வெகுமதிகள் ஆசிய கிரிக்கெட் சபை மற்றும் சிறிலங்கா கிரிக்கட் ஆகியவற்றால் கூட்டாக வழங்கியுள்ளதோடு வெகுமதிகளில் ஒவ்வொரு நிறுவனமும் தலா 25,000 டொலர்களை பங்களிப்பான வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....