rtjy 41 scaled
இலங்கைசெய்திகள்

கிரிக்கெட் மைதான ஊழியர்களுக்கு பரிசில் தொகை

Share

கிரிக்கெட் மைதான ஊழியர்களுக்கு பரிசில் தொகை

ஆசியக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் போது வாக்குறுதியளிக்கப்பட்ட 50,000 டொலர்கள் விருது பணத்தை சிறிலங்கா கிரிக்கெட் சபை ஆர் பிரேமதாச சர்வதேச கிரிக்கட் மைதானம் மற்றும் கண்டி பல்லேகல மைதானம் ஆகியவற்றின் ஊழியர்களுக்கு விநியோகிக்க ஆரம்பித்துள்ளது.

இதன்படி, 2023 ஆசியக் கிண்ணத்தின் போது பணிபுரிந்த கொழும்பு ஆர் பிரேமதாச மைதான ஊழியர்களில் 138 பேரின் (நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்கள்) முயற்சிகளுக்கு வெகுமதி வழங்கப்பட்டதுடன், கண்டி மைதான ஊழியர்களில் 115 உறுப்பினர்கள் வெகுமதியை எதிர்வரும் 8 ஆம் திகதி வழங்கவுள்ளடாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த இரண்டு மைதானங்களின் பணியாளர்களும் போட்டியின் போது பயிற்சி வசதிகள், வெளியக ஆடுகளங்கள், மைதானத்தை மூடுதல், வெளிக்கொணர்தல் மற்றும் தொடர்புடைய சேவைகளை உறுதிசெய்து, மோசமான வானிலை இருந்தபோதிலும், போட்டியை வெற்றிகரமாக நடத்துவதற்கான சிறப்பான சேவையை செய்துள்ளனர்.

இந்த வெகுமதிகள் ஆசிய கிரிக்கெட் சபை மற்றும் சிறிலங்கா கிரிக்கட் ஆகியவற்றால் கூட்டாக வழங்கியுள்ளதோடு வெகுமதிகளில் ஒவ்வொரு நிறுவனமும் தலா 25,000 டொலர்களை பங்களிப்பான வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...