rtjy 36 scaled
இலங்கைசெய்திகள்

சுவிஸிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்களுக்கு பிணை

Share

சுவிஸிலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்களுக்கு பிணை

சுவிட்சர்லாந்திலிருந்து நாடு கடத்தப்பட்ட இலங்கையர்கள் கடந்த வியாழக்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

தடுப்பு காவலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று நீர்கொழும்பு நீதிமன்றில் அவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

இதன்போது அவர்களை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சுவிட்ஸர்லாந்தில் அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட நிலையில் 3 பேர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை (30.11.2023) சுவிட்ஸர்லாந்தின் சூரிச் விமான நிலையத்தின் ஊடாக 3 பேர் அகதித் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட நிலையில் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இலங்கை நேரத்தின் படி காலை 10 மணியளவில் இலங்கைக்கு திரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் போது முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவர் மற்றும் இருவர் உள்ளடங்களாக மூவர் திருப்பியனுப்பப்பட்டுள்ளனர்.

இவர்களில் 2015ஆம் ஆண்டளவில் ஒருவர் அகதித் தஞ்சம் கோரப்பட்ட நிலையில் அவரும் திருப்பியனுப்பப்பட்டுள்ளார்.

சுவிட்ஸசர்லாந்தில் அண்மைக்காலமாக இலங்கையின் அகதித் தஞ்சம் கோருபவர்களின் கோரிக்கைகள் அதிகம் நிராகரிக்கப்பட்டு வருவதாக மனித உரிமை ஆர்வலர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Share
தொடர்புடையது
dead body
இலங்கை

பாடசாலை செல்லும்போது ஆறு வயது பாலகிக்கு நேர்ந்த கதி.

இன்று, மாத்தறை, திக்வெல்ல – கொடஉட பகுதியில் 6 வயது சிறுமி ஒருவர் தனது தாயார்...

Lanka Turkey
இலங்கை

துருக்கித் தூதுவரை சந்தித்த சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவர்.

சர்வஜன அதிகாரம் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர மற்றும் சர்வஜன அதிகார கட்சியின்...

Fire Breaks Out Factory In Katuwana
இலங்கை

அடையாளம் காணப்பட முடியாத வகையில் உடலங்கள் – ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் தீ.

ஹோமாகம, கட்டுவான கைத்தொழில் வலயத்தில் அமைந்துள்ள தலைக்கவசம் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்கள்...

Basil Rajapaksa
இலங்கை

கடும் எச்சரிக்கையுடன் பசில் ராஜபக்சவுக்கு மீண்டும் பிறப்பிக்கப்பட்ட பிடியாணை.

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு எதிராக, மாத்தறை எளியகந்த பகுதியில் உள்ள ஒன்றரை...