tamilni 74 scaled
இந்தியாசெய்திகள்

சென்னையிலிருந்து மிக்ஜாம் புயல் நகர்வு! பலத்த காற்று வீசக்கூடுமென எச்சரிக்கை

Share

சென்னையிலிருந்து மிக்ஜாம் புயல் நகர்வு! பலத்த காற்று வீசக்கூடுமென எச்சரிக்கை

சென்னையில் மையம் கொண்டிருந்த மிக்ஜாம் புயல் நகர்ந்து தற்போது ஆந்திராவின் நெல்லூருக்கு தென் கிழக்கே 30 கிமீ தொலைவிலும், பாபட்லாவில் இருந்து தெற்கே 130 கிமீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மிக்ஜாம் புயல் தற்போது கரையைக் கடக்க தொடங்கியுள்ளதுடன், புயல் முழுமையாக கரையைக் கடக்க இன்று முற்பகல் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

புயல் கரையைக் கடக்கும் போது 90 முதல் 110 கி மீ வரை காற்று வேகமாக வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை முழுவதும் வெள்ளக்காடாக மாறியுள்ளதுடன், மக்களின் பாதுகாப்பு கருதி பெரும்பாலான இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நள்ளிரவில் மழை குறைந்ததால் சென்னையின் பல்வேறு இடங்களில் மீண்டும் மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

மேலும், புயல் தற்போது ஆந்திராவின் நெல்லூரில் மையம் கொண்டுள்ள நிலையில் சென்னையில் மழை குறைந்ததையடுத்து மீட்புப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Share
தொடர்புடையது
29 6
செய்திகள்உலகம்

போர்நிறுத்தத்திற்கோ அல்லது பேச்சுவார்த்தைக்கோ ஈரான் ஒருபோதும் கோரிக்கை விடுக்கவில்லை: அப்பாஸ் அரக்சி

ஈரான் மற்றும் அமெரிக்கா – இஸ்ரேல் இடையிலான தற்போதைய போர்ச் சூழலில், ஈரான் எந்தவொரு போர்நிறுத்தத்தையோ...

28 6
செய்திகள்இந்தியா

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026: தேர்தல் ஆணையம் அட்டவணையை வெளியிட்டது

தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் எதிர்வரும் மே மாதம் 10-ஆம் திகதியுடன் நிறைவடைகிறது....

27 6
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உரத்திற்கும் QR குறியீடு வரும் அச்சம்: அரசாங்கத்தின் நிர்வாகத்தை விமர்சித்த சஜித் பிரேமதாச

விவசாயிகள் கொள்வனவு செய்யும் உரத்திற்கும் எதிர்காலத்தில் QR குறியீடு முறைமை அறிமுகப்படுத்தப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளதாக...

26 7
செய்திகள்உலகம்

லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்: உயிரிழப்பு 850 ஆக அதிகரிப்பு!

லெபனானில் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 850 ஆக உயர்ந்துள்ளதாக லெபனான்...