5 4 scaled
உலகம்செய்திகள்

இந்தோனேசியாவை சூழ்ந்த கறுப்பு புகை மூட்டம் – பலர் பலியாகியுள்ளதாக தகவல்

Share

இந்தோனேசியாவை சூழ்ந்த கறுப்பு புகை மூட்டம் – பலர் பலியாகியுள்ளதாக தகவல்

இந்தோனேசியாவின் மராபி எரிமலையின் பள்ளம் வெடித்ததில் மலையேறும் 11 பேர்கள் உயிரிழந்துள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியாவின் செயலில் உள்ள 127 எரிமலைகளில் ஒன்றான மராபி மலை, ஞாயிற்றுக்கிழமை 9,800 அடி உயரத்திற்கு வெடித்தது.

இதன்போது அப்பகுதியில் 75 மலையேறுபவர்கள் இருந்துள்ளனர். அதில் பெரும்பாலானவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.

திங்கட்கிழமை 3 பேர் மீட்கப்பட்டனர். சிறு வெடிப்பு காரணமாக காணாமல் போன 12 பேரை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட மூன்று பேரும் பள்ளத்தின் அருகே காணப்பட்டுள்ளனர். மீட்புப் பணியாளர்கள் இறந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் பாதுகாப்பாக மீட்டெடுத்துக் கொண்ட வந்துள்ளனர்.

இதையடுத்து, அதிக வெப்பம் இருந்து காரணத்தால் சிலர் தீக்காயங்களால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

மேலும் எரிமலை சாம்பலால் கார்கள் மற்றும் சாலைகள் மூடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
ATSB
உலகம்

நேருக்கு நேர் மோதவிருந்த விமானங்கள் – பயணிகளின் நிலை குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் !

இன்று காலை, சிட்னி விமான நிலையத்தில் ஜெட்ஸ்டார் பயணிகள் விமானமும் கட்டார் ஏர்வேஸ் விமானமும் மோதிக்கொள்ளும்...

tax d
உலகம்

செனட் அவையின் ஒப்புதலுடன் நிறைவேறியது 100 வீத வரி விதிப்பு!

“லிண்ட்சே ஓ கிரஹாம் ரஷ்யா மற்றும் ஈரான் தடைகள் சட்டம் 2026” என அழைக்கப்படும் இந்தச்...

iraan us war
உலகம்

மீண்டும் தீவிரமடையும் தாக்குதல்கள் – பொதுமக்கள் 11 பேர் பலி.

இன்று அதிகாலை ஈரான் ஆதரவு ஹூதி கிளர்ச்சியாளர்கள், ஏமனின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள மாரேப் மாகாணத்தை...

pakistan on police attack
உலகம்

பாகிஸ்தானில் நடத்தப்பட்டுள்ள கொடூர தாக்குதல் – 11 காவல்த்துறையினர் பலி.

ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஹங்கு மாவட்டத்தில் அமைந்துள்ள கஸீனா பொலிஸ் சாவடியைக்...