tamilni 46 scaled
உலகம்செய்திகள்

பிரான்ஸ் தலைநகரில் இனவெறித் தாக்குதல்

Share

பிரான்ஸ் தலைநகரில் இனவெறித் தாக்குதல்

இஸ்லாமியர்கள் அதிகளவில் கொல்லப்படுவதாக தெரிவித்து விரக்தியடைந்த இளைஞன் ஒருவர் பரிஸில் ஈபிள் கோபுரம் அருகே கத்திகுத்து தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் ஈபிள் கோபுரம் அருகே நேற்று (02.12.2023) இரவு குறித்த நபரால் நடத்தப்பட்ட தாக்குதலில் ஜெர்மனியை சேர்ந்த சுற்றுலா பயணி ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸைச் சேர்ந்த 26 வயது இளைஞன் ஒருவரே இவ்வாறு கத்தி ஒன்றினை பயன்படுத்தி தாக்குதலில் ஈடுபட்டுள்ளதுடன் பொலிஸார் குறித்த நபரை கைது செய்துள்ளதாக பிரான்ஸ் நாட்டின் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டார்மானா தனது x தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பலஸ்தீன் மற்றும் ஆப்கானிஸ்தானில் இஸ்லாமியர்கள் அதிகளவில் கொல்லப்படுவதால் விரக்தியில் இவ்வாறு செய்ததாக குறித்த இளைஞன் பொலிஸாரின் விசாரணையில் தெரிவித்துள்ளார்.

மேலும், இவர் ஏற்கனவே 4 ஆண்டுகள் சிறையில் அடைக்கப்பட்டு 2020ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டு பொலிஸார் மற்றும் மன நல மருத்துவரின் கண்காணிப்பின் கீழ் வசித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
25 1
செய்திகள்இலங்கைவிளையாட்டு

உலகக் கிண்ணத்தில் இலங்கை அணியின் தோல்வி: கிரிக்கெட்டை முழுமையாகச் சீரமைக்க வேண்டும் – நாமல் ராஜபக்ஷ!

இலங்கை கிரிக்கெட் அணியின் தற்போதைய வீழ்ச்சி குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ள நாமல் ராஜபக்ஷ, தோல்விக்கான...

24 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யுத்த கால ஊடகவியலாளர் படுகொலைகள்: உண்மைகளைக் கண்டறிய ஜனாதிபதி ஆணைக்குழு வேண்டும் – ரவூப் ஹக்கீம்!

மூத்த ஊடகவியலாளர் பாரதி இராஜநாயகத்தின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வு மற்றும் “பாரதி ஒரு மனிதாபிமான...

23 1
செய்திகள்அரசியல்இலங்கை

அரசியல் இருப்புக்கு போராளிகள் தேவை, ஆனால் அவர்களின் தேவைகள் புறக்கணிப்பு: சிவகுரு மதிவண்ணன் குற்றச்சாட்டு!

புனித பூமி மக்கள் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் சிவகுரு மதிவண்ணன் நேற்று (மார்ச் 1)...

22 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

அவசரகால நிலையை நீட்டிக்க அரசாங்கம் பரிசீலனை!

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாடு...