3 13 scaled
உலகம்செய்திகள்

சீனாவில் பரவுவது ஒரே ஒரு நோய்க்கிருமி அல்ல… எச்சரிக்கை விடுத்த மருத்துவர்

Share

சீனாவில் பரவுவது ஒரே ஒரு நோய்க்கிருமி அல்ல… எச்சரிக்கை விடுத்த மருத்துவர்

சீனாவை மீண்டும் அச்சுறுத்தும் மர்ம காய்ச்சலால் மருத்துவமனைகள் நிரம்பிவரும் நிலையில், அது ஒரே ஒரு நோய்க்கிருமி அல்ல, பல வகை என மருத்துவர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சீனாவின் பெய்ஜிங் மற்றும் லியோனிங்கில் நிமோனியாவின் உறுதி செய்யப்படாத பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து நிபுணர்கள் தரப்பு பீதியடைந்துள்ளனர். மட்டுமின்றி, நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிரடியாக உயர்ந்து வருவதை அடுத்து, ProMED அமைப்பால் ஏற்கனவே தொற்றுநோயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மர்ம காய்ச்சலுக்கு பல எண்ணிக்கையிலானோர் பதிக்கப்பட்டு மருத்துவமனைகளை நாடியுள்ளனர். இருமல் உள்ளிட்ட எந்த குறிப்பிடத்தக்க அறிகுறியும் இல்லை என்றும், ஆனால் தீவிரமான காய்ச்சல் மட்டுமே காணப்படுவதாக கூறுகின்றனர்.

சீனா தரப்பில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வில், அசாதாரண சூழல் இல்லை என்றே உலக சுகாதார அமைப்புக்கு தகவல் தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி, அக்டோபர் மத்தியில் இருந்தே பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாகவும் சீனா தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தற்போது பெரும்பாலும் சிறார்களில் பரவும் இந்த மர்ம காய்ச்சலானது ஒரே ஒரு கிருமியல்ல எனவும், பல வகை நோய்க்கிருமிகள் காணப்படுவதாகவும் மருத்துவர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, உலக சுகாதார அமைப்பு இந்த மர்ம காய்ச்சல் தொடர்பில் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...