sleep
உலகம்செய்திகள்

தூங்கும் நேரத்தை குறைப்பது எப்படி? – ஜப்பானில் பயிற்சி

Share

தூங்கும் நேரத்தை குறைப்பது எப்படி? – ஜப்பானில் பயிற்சி

துாக்கம் பலருக்கு வரம். சிலருக்கு சாபம் என்றே சொல்லலாம்.

ஆனால் மனிதன் ஆரோக்கியமாக வாழ ஒர் இரவுக்கு 7 அல்லது அதற்கு மேற்பட்ட மணிநேரங்கள் தவறாமல் தூங்க வேண்டும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இவ் ஆய்வுகளை பொய்யாக்கும் வகையில் ஜப்பானில் 30 நிமிடங்கள் மட்டுமே தூங்கும் 36 வயதுடைய தைசுகே ஹோரி வசித்து வருகிறார். இவர் ஜப்பான் ஷார்ட் ஸ்லீப்பர் அசோசியேஷன் தலைவராக பதவி வகித்து வருகிறார்.

இவ் விடயம் தொடர்பாக, தைசுகே ஹோரி கூறியதாவது:

“எல்லாரையும் போல நானும் 8 மணி நேரம் தூங்கிக்கொண்டு இருந்தேன். ஆனால் பல வேலைகள் பாதித்தன. எனவே தூங்கும் நேரத்தை குறைக்கத் தொடங்கினேன். கொஞ்சம் கொஞ்சமாக குறைத்து 12 ஆண்டுகளாக ஒரு நாளைக்கு 30 நிமிடங்கள் மட்டுமே தூங்குகிறேன். சில நாள்களில் அரை மணி நேரத்துக்கும் குறைவாகக்கூட தூங்குகிறேன். இதனால் உடல் ரீதியாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை” என தெரிவித்துள்ளார்.

மேலும் இவர் தூங்கும் நேரத்தை எப்படி குறைப்பது? என்பது குறித்து நூற்றுக்கணக்கானோருக்கு பயிற்சி அளித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 225
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...

world 224
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திக்வெல்ல வெவுருகன்னல விகாரையில் பழங்கால வாள் திருட்டு: பொலிஸார் தீவிர விசாரணை!

மாத்தறை, திக்வெல்ல பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க வெவுருகன்னல புடு ராஜ மகா விகாரையின் அருங்காட்சியகத்திலிருந்து...

world 223
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இளம் பெண் கொடூரக் கொலை: கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பரிதாப உயிரிழப்பு!

ஹட்டன், வெலியோயா எஸ்டேட் பகுதியில் வசித்து வந்த 28 வயதுடைய இளம் பெண் ஒருவர், இன்று...