வே.இராதாகிருஷ்ணன் 55
இலங்கைசெய்திகள்

‘பார் கொத்தணியால் மயானம் நோக்கி நாடு! – ராதாகிருஸ்ணன் விளாசல்

Share

நாட்டில் தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் மதுபானசாலைகளைத் திறந்து மக்களை கூட்டம் கூட்டமாக ஒன்றுகூட விட்டமையானது நாட்டு மக்களை விரைவில் சுடுகாடு நோக்கி அழைத்து ஒட்டுமொத்த நாட்டையும் சுடுகாடாக மாற்றும் அரசின் செயலாகும் .

இவ்வாறு மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான வே. ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

கொரோனாவிலிருந்து நாட்டை மீட்டெடுக்க போராடிக் கொண்டிருக்கும் இவ்வேளையில் மதுபானசாலைகள் திறக்கப்பட்டுள்ளன. இதனால் நாடு மிகப்பெரிய விளைவை சந்திக்கவுள்ளது.

நாட்டு மக்களை கொரோனா அரக்கனிடம் பலி கொடுக்க அரசு தயாராகிவிட்டது.

ஊரடங்கை அடுத்த மாதம் வரை நீடித்து திடீரென மதுபானசாலைகளை திறந்து பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது அரசு.

அனைத்து நகரங்களில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் மக்கள் கூட்டம் கூட்டமாக மதுபானங்களை பெறுகின்றனர். இதன் தாக்கம் இன்னும் சில நாள்களில் தெரியவரும்

அத்தியாவசிய பொருள்களை வாங்க சென்றவர்களை அடித்து துரத்தும் சுகாதாரத் தரப்பினர் இன்று மதுபான போத்தல்களை வாங்கும்போது வேடிக்கை பார்த்து கை கட்டிக்கொண்டு நிற்கின்றனர்.

இன்னும் சில நாள்களில் பார் கொத்தணி உருவாக வாய்ப்பை ஏற்படுத்தி நாட்டை சுடுகாடாக மாற்ற அரசு எத்தணிக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 92
செய்திகள்உலகம்

‘அவரை மீட்டுவிட்டோம்’: ஈரானில் அமெரிக்க விமானி அதிரடி மீட்பு!

ஈரானிய வான்பரப்பில் சுட்டு வீழ்த்தப்பட்ட அமெரிக்கப் போர் விமானத்திலிருந்து குதித்து மாயமாகியிருந்த விமானி, ஒரு துணிச்சலான...

Untitled 91
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

விவசாயிகளுக்கு மகிழ்ச்சி: புதிய உரம் ஒதுக்கீட்டு முறை அறிமுகம்!

இலங்கை சந்தையில் உரத்தின் விலையினைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு நியாயமான விலையில் தட்டுப்பாடின்றி உரம் கிடைப்பதை உறுதி...

Untitled 90
செய்திகள்உலகம்

புஷெர் அணுமின் நிலையம் மீது தாக்குதல்: கதிர்வீச்சு அபாயம் என ஈரான் எச்சரிக்கை!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகளுக்கும் ஈரானுக்கும் இடையே போர் தீவிரமடைந்து வரும்...

Untitled 89
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கியூ.ஆர். பணப்பரிமாற்றத்திற்கு இனி கட்டணமில்லை: நாளை முதல் அதிரடி மாற்றம்!

இலங்கையில் டிஜிட்டல் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில், லங்கா கியூ.ஆர் (LankaQR) மூலமான பணப்பரிமாற்றங்களுக்கு நாளை (ஏப்ரல்...