tamilni 123 scaled
இலங்கைசெய்திகள்

இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல்

Share

இலங்கையில் அடுத்த வருடம் ஜனாதிபதி தேர்தல்

இலங்கையில் அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும் என நம்புவதாக இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

எந்தவொரு ஜனநாயகத்திற்கும் சரியான நேரத்தில் தேர்தல்கள் முக்கியம். இதன் அடிப்படையில் அடுத்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அரசியலமைப்பின் பிரகாரம் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள், நாடாளுமன்றத் தேர்தல்கள் மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் என்பனவும் நடைபெறுமென அமெரிக்கா நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

அவை அனைத்தும் மக்களுக்கு குரல் கொடுக்கின்றன, வாக்குப்பெட்டியின் மூலம் தங்கள் கருத்தைக் கூற முடியும் மற்றும் அவர்களின் தலைமையைத் தேர்ந்தெடுக்க முடியும் என அமெரிக்க தூதுவர் கொழும்பு ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அடுத்த வருடமும் அதற்குப் பின்னரும் தேர்தல்கள் திட்டமிடப்பட்டிருப்பதாக அமெரிக்கா நம்புகிறது.

அத்துடன் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலைக் காண அமெரிக்கா ஆவலுடன் காத்திருக்கிறது என்றும் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Shooting 3
இலங்கை

இன்றைய தினம் நாட்டில் மற்றுமொரு துப்பாக்கிச்சூடு.

இன்று மாலை, கொழும்பு – தெமட்டகொடை, குப்பியாவத்தை மயானத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

Shooting 2
இலங்கை

காவல்துறை உத்தியோகத்தரின் மீது துப்பாக்கி பிரயோகம்.

பெலியத்த, வலவல பகுதியில், திக்வெல்ல காவல் நிலையத்தில் கடமைற்றும் காவல்துறை உத்தியோகத்தர் ஒருவரின் வீட்டின் மீது...

dead body 1
இலங்கை

நீரில் மூழ்கிய சிறுவன் சடலமாக மீட்பு.

நேற்று மாலை, கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில், நான்கு சிறுவர்கள் இணைந்து...

low r 2
இலங்கை

க.பொ.த உயர்தரப் பரீட்சை பிற்போட படுமா? – நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு.

இவ்வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு முதலாம் மற்றும் இரண்டாம் தடவைகளாகத் தோற்றவுள்ள மாணவர் குழுவொன்றினால் தாக்கல்...