tamilni 99 scaled
இலங்கைசெய்திகள்

கொழும்பில் தொடரும் ஆபத்து

Share

கொழும்பில் தொடரும் ஆபத்து

கொழும்பு மாநகர சபையிடம் ஆபத்தான மரங்களை அடையாளம் காணும் இயந்திரம் இருந்தாலும் அதனை பயன்படுத்த கூடியவர்கள் இல்லை என மாநகர ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மரங்கள் மற்றும் கிளைகள் முறிந்து விழுந்ததில் 36 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, மோசமான வானிலை காரணமாக நேற்று கொழும்பில் மற்றுமொரு மரம் முறிந்து வீழ்ந்ததில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் கார் மற்றும் முச்சக்கரவண்டி மீது மரம் விழுந்ததில் முச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஒக்டோபர் மாதம் 6ஆம் திகதி பேருந்து மீது மரம் விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.

ஒக்டோபர் மாதம் 30ஆம் திகதி அதே வீதியில் மற்றொரு மரம் விழுந்ததில் 3 வாகனங்கள் சேதமடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...

23 2
இலங்கைசெய்திகள்

விரயமாகும் இறக்குமதி செய்யப்பட்ட உப்பு.. கடும் நெருக்கடியில் அரசாங்கம்!

இறக்குமதி செய்யப்பட்ட உப்பு, துறைமுகத்தில் உள்ள சில கொள்கலன்களில் இருந்து உருகி வெளியேறி வருவதாக கொள்கலன்...

22 4
இலங்கைசெய்திகள்

இலங்கையில் பெண்களுக்கு ஏற்பட்டுள்ள மோசமான நிலை! எச்சரிக்கும் அதிகாரிகள்

குடும்ப வன்முறை சம்பவங்கள் குறித்து சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர். இந்த குடும்ப வன்முறை...

20 2
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் விபத்துக்குள்ளான எரிபொருள் பாரவூர்தி.. ஒருவர் படுகாயம்!

கிளிநொச்சி – பூநகரி பகுதியில் எரிபொருள் பாரவூர்தி ஒன்று விபத்துக்குள்ளானதில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த விபத்து...