us
இலங்கைசெய்திகள்

பல்கலைக்கழகங்கள் மீள ஆரம்பம்!

Share

நாட்டில் கொரோனாத் தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட  பல்கலைக்கழகங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இவ்வாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், 30 வயதுக்கு குறைவான கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்கள், பல்கலை மாணவர்கள் ஆகியோருக்கு விரைவில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொடுக்குமாறு சகல பல்கலைக்கழங்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஏற்கனவே தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தடுப்பூசி செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து அனைத்து பல்கலைக்கழக சுகாதாரத்துறையினர் மற்றும் துணைவேந்தர் உள்ளிட்ட பல்கலைக்கழகத் தரப்பினருடன் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலைத் தொடர்ந்தே பல்கலைக்கழகங்கள் விரைவில் மீளத் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது – எனத் தெரிவித்துள்ளார்.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – மலேசியா இடையே புதிய வான்வழி இணைப்பு: பாட்டிக் ஏர் தனது சேவையைத் தொடங்கியது!

மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான விமான இணைப்பை வலுப்படுத்தும் ஒரு புதிய மைல்கல்லாக, பாட்டிக் ஏர் மலேசியா...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொட்டகமுவ மும்முறை கொலை வழக்கு: 18 ஆண்டுகளின் பின் நான்கு சந்தேக நபர்கள் விடுதலை!

கடந்த 2006-ஆம் ஆண்டு பாலப்பிட்டிய, தொட்டகமுவ பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யக்கல கட்சி அலுவலக விவகாரம்: ஜே.வி.பி-யிடம் இருந்து முன்னிலை சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

யக்கல (Yakkala) பகுதியில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் (FLSP) அலுவலகத்தை ஜனதா விமுக்தி பெரமுன...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகோடா ராஜினாமா: புதிய பதில் தலைவர் நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் ஆகிய நிறுவனங்களின் தலைவராகப் பணியாற்றி வந்த...