us
இலங்கைசெய்திகள்

பல்கலைக்கழகங்கள் மீள ஆரம்பம்!

Share

நாட்டில் கொரோனாத் தொற்று பரவல் காரணமாக மூடப்பட்ட  பல்கலைக்கழகங்கள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இவ்வாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, அரச தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும், 30 வயதுக்கு குறைவான கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்கள், பல்கலை மாணவர்கள் ஆகியோருக்கு விரைவில் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொடுக்குமாறு சகல பல்கலைக்கழங்களுக்கும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அனைத்து பல்கலைக்கழக கல்வி மற்றும் கல்வி சாரா ஊழியர்களில் 30 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஏற்கனவே தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் தடுப்பூசி செயற்பாட்டின் முன்னேற்றம் குறித்து அனைத்து பல்கலைக்கழக சுகாதாரத்துறையினர் மற்றும் துணைவேந்தர் உள்ளிட்ட பல்கலைக்கழகத் தரப்பினருடன் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.

இந்த கலந்துரையாடலைத் தொடர்ந்தே பல்கலைக்கழகங்கள் விரைவில் மீளத் திறப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது – எனத் தெரிவித்துள்ளார்.

 

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொழிலதிபர்களுக்கு நில வங்கி: அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி புதிய அறிவிப்பு!

இலங்கையில் புதிய தொழில் முயற்சிகளை ஊக்குவிக்கவும், முதலீட்டாளர்களுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை எளிதாக்கவும் ‘நில வங்கி’...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாடாளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவின் மனு: ஜூன் 02 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

நாடாளுமன்றத்தின் பதவி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள பிரதிப் பொதுச்செயலாளர் சமிந்த குலரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் (Writ)...

Untitled 22
செய்திகள்இலங்கை

இலங்கை – ரஷ்யா இடையிலான உயர்மட்டப் பேச்சுவார்த்தை: ரஷ்யப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வருகை!

இலங்கை மற்றும் ரஷ்யாவிற்கு இடையிலான இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், ரஷ்யக் கூட்டமைப்பின் பிரதி...

Untitled 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

புத்தாண்டு காலத்தில் தட்டுப்பாடின்றி கோழி இறைச்சி: விலையைச் சீராகப் பேண நடவடிக்கை!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலப்பகுதியில் சந்தையில் கோழி இறைச்சிக்கு எவ்வித தட்டுப்பாடும் ஏற்படாத வகையில்...