rtjy 28 scaled
இந்தியாஇலங்கைசெய்திகள்

மலையக தமிழ் மக்களுக்கு தமிழ்நாடு குரல் கொடுக்கும்: ஸ்டாலின் உறுதி

Share

மலையக தமிழ் மக்களுக்கு தமிழ்நாடு குரல் கொடுக்கும்: ஸ்டாலின் உறுதி

“இலங்கையை வாழவைத்த மலையக தமிழ் மக்களை அனைத்து உரிமைகளுடனும் வாழ வைக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்காக தொப்புள்கொடி உறவான தமிழ்நாடு என்றும் குரல் கொடுக்கும்.” என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

‘நாம் 200’ தேசிய நிகழ்வுக்கு வழங்கியுள்ள வாழ்த்து செய்தியிலேயே முதல்வர் இவ்வாறு கூறியுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கையில் வாழும் மலையகத் தமிழர்களின் வாழ்வு என்பது 200 ஆண்டுகளை எட்டுகின்றது. இரண்டு நூற்றாண்டுகளாக தனிபெரும் இனமாக வாழ்ந்துவரும் மலையக தமிழ் மக்களுக்கு எனது வாழ்த்துகள். இந்நிகழ்வில் காணொளிமூலம் நான் உரையாற்ற வேண்டும் என அழைப்பு விடுத்த ஜீவன் தொண்டமானுக்கு நன்றிகள்.

மனிதன் வாழ்ந்திராத மலைக்காடுகளை மலையக தோட்டங்களாக மாற்றியவர்கள்தான் மலையக தமிழர்கள். 1823 இல் இலங்கையில் கோப்பி பயிர் செய்கை ஆரம்பமானதில் இருந்துதான் மலையக தமிழ் தொழிலாளர்களின் வரலாறு தொடங்குகின்றது.

கோப்பி தோட்டங்கள் பெருக, பெருக இந்திய தொழிலாளர்கள் ஏராளமாக இலங்கைக்கு அழைத்துசெல்லப்பட்டனர். அதன்பின்னர் தேயிலை உற்பத்தி ஆரம்பமானது. அதனையும் மலையக மக்கள் பலப்படுத்தினார்கள்.

பயிரிடப்படாத நிலத்தை பயிரிட்டும், காடுகளாக இருந்த நிலத்தை காசு பயிர்களாக விளைவித்தும் பின்தங்கிய பொருளாதாரத்தை முன்தங்கிய பொருளாதாரமாக மாற்றியவர்கள்தான் மலையக தோட்டத்தொழிலாளர்.

இப்படி கடந்த 200 வருடங்களாக இலங்கையின் நல்வாழ்வுக்கு மகத்தான பங்களிப்பை வழங்கினர். வழங்கியும் வருகின்றனர். இலங்கை நாட்டுக்காக தமது உழைப்பை வழங்கியவர்கள் மலையகத் தமிழர்கள்.

இலங்கை நாடு உயர உழைத்தவர்கள். தங்களது இரத்தத்தையும், வியர்வையையும், காலத்தையும், கடமையையும் இலங்கைக்காகவே ஒப்படைத்தவர்கள். திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றிய காலம் முதல் புலம்பெயர் தமிழர்களின் உரிமையைக் காப்பதில் கண்ணும், கருத்துமாக செயற்பட்டது.

வாக்குரிமைக்காக குரல் கொடுத்தது. இப்படி தமிழர் மக்களின் உரிமைக்காக ஆரம்பக்காலம் முதல் குரல் கொடுக்கும் இயக்கம்தான் திராவிட முன்னேற்றக்கழகம். மலையக தமிழ் மக்களின் நீதியும், உரிமையும் நிலைநாட்டப்பட வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றேன்.

மலையகத் தமிழர்களின் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும். இலங்கையில் வாழும் அனைத்து இன மக்களையும்போல கல்வியிலும், பொருளாதார முன்னேற்றத்திலும், அவர்கள் மேலெலும் காலத்தை எதிர்பார்த்து தமிழகம் காத்திருக்கின்றது.

சமூக உரிமைகள் வழங்கப்பட வேண்டும். நாட்டை வாழ வைத்த மக்களை வாழ வைக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.” என்றார்.

Share
தொடர்புடையது
25 6860cb5917db7
சினிமாசெய்திகள்

சமந்தாவுடன் கீர்த்தி சுரேஷ்.. நடிகை வெளியிட்ட லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ

இந்திய அளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் என்றால்...

25 685fae44c22dc
சினிமாசெய்திகள்

டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இறுதி வசூல்.. Worldwide பாக்ஸ் ஆபிஸ் விவரம்

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார் மற்றும் சிம்ரன் இணைந்து நடித்து கடந்த மே...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 5
சினிமாசெய்திகள்

DNA திரைப்படம் இதுவரை இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா! பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்

ஒரு நாள் கூத்து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமனவர் நெல்சன் வெங்கடேசன். இதன்பின்...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 2
சினிமாசெய்திகள்

ஆஸ்கார் விருது குழுவில் கமல்.. பவர் ஸ்டார் பவன் கல்யாண் அவர் பற்றி போட்ட பதிவு வைரல்

நடிகர் கமல்ஹாசன் தற்போது ஆஸ்கார் விருது வழங்கும் குழுவில் தேர்வாகி இருப்பதற்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது....