செய்திகள்
தமிழ்க் கட்சிகளின் கூட்டு ஆவணம் மலையக, முஸ்லீம் கட்சிகளால் புறக்கணிப்பு?
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்படவுள்ள கூட்டு ஆவணத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் இன்று கையொப்பமிட்டன. எனினும், மலையகக் கட்சிகளும், முஸ்லிம் கட்சிகளும் கையொப்பமிடவில்லை.
இதனால் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பங்களிப்புடன் மாத்திரம் குறித்த ஆவணம் பாரத பிரதமருக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளது.
இரா. சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் இலங்கைக்கான இந்தியத் தூதுவரை விரைவில் நேரில் சந்தித்து, மேற்படி ஆவணத்தை டில்லிக்கு அனுப்புவதற்காக கையளிக்கவுள்ளனர்.
தமிழ் பேசும் மக்களின் அரசில் அபிலாஷைகளை நிறைவேற்றுமாறு இலங்கை அரசுக்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் எனக் கோரியே, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் மேற்படி கூட்டு ஆவணக் கோரிக்கை கையளிக்கப்படவுள்ளது.
கடந்த 21 ஆம் திகதி இறுதி செய்யப்பட்ட ஆவணத்தில் சம்பந்தன் உட்பட பல தலைவர்களும் இன்று கையொப்பமிட்டனர்.
நீதியரசர் சிவீ விக்னேஸ்வரன், சுரேஸ் பிரேமச்சந்திரன், ஶ்ரீகாந்தா, செல்வம் அடைக்கலநாதன், சித்தார்த்தன் ஆகியோர் கையொப்பமிட்டனர். மாவை சேனாதிராஜாவும் கையொப்பமிடவுள்ளனர்.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இரா. சம்பந்தனை அவரது இல்லத்தில் இன்று சந்தித்தார். அவரது தரப்பினதும், முஸ்லிம் தரப்பினதும் பிரச்சினைகளைப் புரிந்துகொண்டு அவர்களின் பங்களிப்பு இல்லாமலேயே பொது ஆவணத்தை பிரதமர் மோடிக்கு அனுப்புவதற்கு மனோவிடம் நேரிலும், ஹக்கீமுக்கு தொலைபேசியிலும் சம்பந்தன்
தெரியப்டுத்தியுள்ளார்.
You must be logged in to post a comment Login