777777
இலங்கைசெய்திகள்

யாழில் ஊரடங்கு விதி மீறல் – அன்டிஜென் சோதனையில் ஐவருக்கு தொற்று உறுதி!

Share

தனிமைப்படுத்தல் ஊரங்கை மீறி யாழில் வீதிகளில் பயணிப்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி வீதிகளில் தேவையற்று பயணிப்பவர்கள் அதிவிரைவு அன்டிஜென் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதனை பொலிஸார் மற்றும் சுகாதாரத் துறையினர் இணைந்து  கொக்குவில்– கே.கே.எஸ் வீதியில் ஆரம்பித்துள்ளனர்.

தனிமைப்படுத்தல் ஊரடங்கு அடுத்த மாதம் முதலாம் திகதிவரை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் தற்போது பொதுமக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

இதனைக் கட்டுப்படுத்துவதற்காக அதிவிரைவு அன்டிஜென் சோதனை முன்னெடுக்கும் பணி  ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 40 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட சோதனையில் 5 பேர் தொற்றுடன் இனங்காணப்பட்டுள்ளனர்.

அவர்கள் கோப்பாய் கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
1765326736 Sri Lanka showers Met 6
செய்திகள்இலங்கை

தீவிரமடையும் மழையினால் நீர்நிலைகள் நிரம்புகின்றன: வடகிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் வெள்ள அபாயம் குறித்து எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள தாழமுக்கம் காரணமாக நாட்டில் மீண்டும் அதிதீவிர மழைவீழ்ச்சி பதிவாகுமாயின், நீர்நிலைகளின் நீர்மட்டம்...

image 870x 66fcf5f77e960
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர்களுக்கு நிரந்தர அரசியல் தீர்வு: இது வெறும் வாக்குறுதி அல்ல, செயல் வடிவம் பெறும்- அமைச்சர் விஜித ஹேரத் உறுதி!

இலங்கையில் தமிழ் மக்களுக்கு அரசியல் ரீதியான நிரந்தரத் தீர்வு வழங்கப்படும் என்றும், கடந்த காலங்களைப் போலன்றி...

IMG 2110
செய்திகள்உலகம்

சீனாவில் தேவாலயங்கள் மீது கடும் நடவடிக்கை: கட்டிடம் இடிப்பு மற்றும் முக்கிய தலைவர்கள் கைது!

சீனாவில் அரச அங்கீகாரம் பெறாத ‘நிலத்தடி தேவாலயங்கள்’ (Underground Churches) மீது அந்நாட்டு கம்யூனிஸ்ட் அரசு...

images 14 1
செய்திகள்உலகம்

வெனிசுவேலா ஜனாதிபதி கைது செய்யப்பட்டது ஐநா கோட்பாடுகளுக்கு எதிரானது – அமைச்சர் பிமல் ரத்நாயக்க கண்டனம்!

ஜனநாயக ரீதியாகத் தெரிவு செய்யப்பட்ட வெனிசுவேலா ஜனாதிபதியை அமெரிக்கா கைது செய்துள்ளமையானது சர்வதேச சட்டங்களையும் ஐக்கிய...