23 653c992c3b866
இலங்கைசெய்திகள்

நண்பியின் திருமணத்தில் கலந்து கொண்ட யுவதிக்கு நேர்ந்த பரிதாபம்

Share

நண்பியின் திருமணத்தில் கலந்து கொண்ட யுவதிக்கு நேர்ந்த பரிதாபம்

புத்தளத்தில் 20 வயதான இளம் யுவதியொருவர் திடீரென சுகயீனமடைந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் நேற்று (27.10.2023) அதிகாலை இடம்பெற்றுள்ளது.

கடந்த வருடம் க.பொ.த உயர்தரப் பரீட்சை எழுதிய குறித்த யுவதி தனது நண்பியின் திருமண நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நேற்று முன் தினம் இரவு புத்தளத்திற்கு வருகை தந்துள்ளார்.

 

திருமண நிகழ்வில் முழுமையாக கலந்து கொண்ட யுவதி, திருமண விருந்தை சாப்பிட்டதன் பின் தனது உடல்நிலை சரியில்லை எனவும், உடனடியாக தான் வீட்டுக்குச் செல்ல வேண்டும் எனவும் நண்பியிடம் கூறிவிட்டு, அங்கிருந்து முச்சக்கரவண்டி ஒன்றில் தனது வீட்டுக்குச் சென்றுள்ளார்.

 

திடீரென சுகயீனமடைந்த யுவதி

இவ்வாறு முச்சக்கரவண்டியில் சென்று கொண்டிருக்கும் போது குறித்த யுவதி திடீரென சுகயீனமடைந்ததுடன், அவர் உடனடியாக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 

இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட குறித்த யுவதிக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என புத்தளம் பகுதிக்கான திடீர் மரண விசாரணை அதிகாரி பதுர்தீன் முஹம்மது ஹிஸாம் தெரிவித்துள்ளார்.

 

உயிரிழந்த யுவதியின் சடலம் மீதான மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனையின் பின்னர், சடலம் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், உயிரிழந்த மாணவியின் சில உடல் அவையங்கள் இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் பின்னரே மரணத்திற்கான காரணத்தை தெரிவிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
sarath
இலங்கை

இன்று மற்றுமொரு முன்னாள் அமைச்சரின் சகோதரரும் கைது!

முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரரான சரத் வீரவன்ச, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான வாகனங்களை...

Shooting
இலங்கை

சற்றுமுன் கட்டுநாயக்கவில் துப்பாக்கிச்சூடு.

துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இன்று பிற்பகல் வேளை, கட்டுநாயக்க – தேவமொட்டாவ பகுதியில் உள்ள...

பேராசிரியர் சரத் அபேகோன்
இலங்கை

ஜனாதிபதிக்கு பறந்த பதவி விலகல் கடிதம்.

தமது பதவியிலிருந்து விலகுவதாக மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், பதவி விலகல் குறித்த...

are 2
இலங்கை

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கைது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க, நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கைது...