rtjy 230 scaled
இலங்கைசெய்திகள்

பேருந்துகளை அலங்கரிக்க இடமளிக்கப்பட வேண்டும்

Share

பேருந்துகளை அலங்கரிக்க இடமளிக்கப்பட வேண்டும்

மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தாத சில விதிமுறைகளுக்கு உட்பட்ட வகையில் பேருந்துகளை அலங்கரிக்க அனுமதி வழங்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பேருந்து உரிமையாளர்களுக்கும் நாமல் ராஜபக்சவிற்கும் இடையில் நேற்று(19.10.2023) இடம்பெற்ற கலந்துரையாடலிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும், பேருந்துகளை அலங்கரிப்பது ஒரு தனித்தொழில் அதேபோன்று ஒரு கலை எனவும் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத பட்சத்தில் பேருந்துகளை அலங்கரிப்பதில் பிரச்சினை இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் போக்குவரத்து விதிகளை மீறும் சட்டங்கள் மற்றும் மக்களுக்கு இடையூறு விளைவிக்கும் எந்த நடவடிக்கையும் அதே வழியில் செயல்படுத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் அலங்கார வேலைகளில் ஈடுபட்டுள்ள பேருந்துகளுக்கு நிவாரணம் வழங்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
01 31
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஹட்டனில் போதை மாத்திரைகளை விற்ற மருந்தக உரிமையாளர் கைது: 1400 மாத்திரைகள் பறிமுதல்!

மருத்துவர்களின் பரிந்துரைச் சீட்டு (Prescription) இல்லாமல், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்காகப் பயன்படுத்தப்படும் மருந்துகளை இளைஞர்களுக்குப் போதைக்காக விற்பனை...

01 30
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மசகு எண்ணெய் விலை 150 டொலரை எட்டினால் உலகப் பொருளாதார வீழ்ச்சி: பிளாக்ராக் தலைவர் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக மசகு எண்ணெய் விலை ஒரு பீப்பாய்...

01 29
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் அதிரடி உயர்வு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடி...

01 28
செய்திகள்உலகம்

அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்தது ஈரான்: “ஒருபோதும் இணங்க முடியாது” என அதிரடி!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்வைத்துள்ள யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான யோசனைகளையும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பையும்...