கொங்கோவில் எபோலா வைரஸ் வேகமாகப் பரவிவரும் நிலையில், இந்த தாக்கமானது உலக வரலாற்றிலேயே இரண்டாவது மிகப்பெரிய அலை என தரவுகள் குறிப்பிடுகின்றன.
இந்நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையிலும் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
தற்போது வரை கொங்கோவில் எபோலா பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 3,532 ஆக உயர்ந்துள்ளதுடன், 1,556 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் செய்தித் தொடர்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.
அரசு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை விட உண்மையான பாதிப்பு எண்ணிக்கை 4 மடங்கு வரை அதிகமாக இருக்கக்கூடும் என உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது.