ஜெர்மனியில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக, இந்த ஆண்டில் இதுவரை சுமார் 9,800 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்றைய நாளில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கையின் பிரகாரம், உயிரிழந்தவர்களில் பெரும்பான்மையானோர் 75 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதினை உடையவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில், ஒரு வாரத்தின் சராசரி வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸை விட அதிகரித்ததன் காரணமாக, இந்த மரணங்களின் சதவீதம் வேகமாக அதிகரித்துள்ளது.
இந்த லையில்,எதிர்வரும் நாட்களில் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் எல்லையைத் தாண்டக்கூடும் என்பதால், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் எனவும் சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.