forest officer
செய்திகள்செய்திகள்

03 மாதக் கர்ப்பிணிப் பெண் அதிகாரியைத் தாக்கிய தம்பதி!!

Share

3 மாத கர்ப்பிணியான வன சரக பெண் அதிகாரியைத் தாக்கிய தம்பதியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மராட்டிய மாநிலம் – சட்டாரா பகுதியைச் சேர்ந்த வன சரக பெண் அதிகாரியான சிந்து சனாப், காட்காவன் வன பகுதியில் கடமையாற்றி வருகிறார்.

3 மாதக் கர்ப்பிணியான குறித்த பெண் அதிகாரி கடமை முடிந்து வீடு திரும்பும்போது, கணவன் மற்றும் மனைவி இணைந்து கடுமையாகத் தாக்கியுள்ளனர்.

இந்த நிலையில் இத்தாக்குதல் சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட வன சரக பெண் அதிகாரி கூறும்போது,

பணியில் இணைந்த நாள் முதல், அந்த நபர் என்னை அச்சுறுத்துவதும், பணம் கேட்டு தொந்தரவு செய்தபோதும், நான் அதற்கு அஞ்சவில்லை. நேற்றைய தினம் எனது கடமையை முடித்துக்கொண்டு திரும்பி வந்தபோது, என்னைத் தாக்கியதோடு மட்டுமல்லாமல், எனது கணவரையும் காலணிகளால் தாக்கினர் என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டுள்ள ராமசந்திர ஜான்கர், முன்னாள் பஞ்சாயத்துத் தலைவராகவும், உள்ளூர் வன குழு உறுப்பினராகவும் இருப்பதாக தெரியவந்துள்ளது.

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...