Theepan scaled
செய்திகள்அரசியல்இந்தியா

அதிபர், ஆசிரியர்கள் நாளை பணிப்புறக்கணிப்பில்….? – இலங்கை ஆசிரியர் சங்கம் வலியுறுத்து

Share

நாளை 21ம் திகதி மற்றும் நாளை மறுதினம் 22ம் திகதிகளில் அதிபர் ஆசிரியர்கள் பணிக்கு செல்லாமல் பணிப்பகிஷ்கரிப்பு செய்ய வேண்டும்.

இவ்வாறு இன்று நடந்த ஊடக சந்திப்பில் இலங்கை ஆசிரியர் சங்கத்தினுடைய உபதலைவர் தீபன்தீலீசன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

அரசியல்வாதிகளுடனும் அரசோடு சேர்ந்து இயங்குகின்ற ஒரு சில அமைப்புகளும் சங்கங்களும், 21 ஆம் திகதி பாடசாலைக்குச் செல்வதென அறிவித்திருந்தாலும், அதிபர்களும், ஆசிரியர்களும் எங்கள் உரிமைக்காக பணியைப் பகிஸ்கரித்து இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம்.

அந்த வகையிலே 21,22ம் திகதி பாடசாலைகள் அனைத்திற்கும் அதிபர் ஆசிரியர்கள் விடுமுறையை அறிவிக்காமல் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி எந்தவித அச்சமுமின்றி அனைத்து அதிபர் ஆசிரியர்களும் இப்போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

பகிஸ்கரித்தால் சம்பளத்தை நிறுத்துவோமென கூறினாலும் அவற்றை சட்ட ரீதியாக செயற்படுத்த முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

பகிஸ்கரிப்பு நடைபெறும் பொழுது அதனால் ஏற்படுகின்ற பாதிப்புகள் தொடர்பாக எந்த சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியாது என்ற சட்ட ஏற்பாடு காணப்படுகிறது.

அரசாங்கம் ஆசிரியர் அதிபர்களோடு தொடர்புபடாத யாரை வைத்து பாடசாலைகளை ஆரம்பித்தாலும், அதிபர் ஆசிரியர்கள் பாடசாலைக்குச் செல்லாத இடத்தில் எந்த விதமான பாதிப்புக்களும் ஆசிரியர் அதிபர்களுக்கு ஏற்படப் போவதில்லை. என்பதை நாங்கள் பொறுப்புடன் கூறிக் கொள்கிறோம்.

21,22 ஆம் திகதிகளில் மாணவர்களை பாடசாலைக்கு செல்வது எந்த விதத்திலும் பாதுகாப்பானதாக இருக்காது.

25ஆம் திகதி நாங்களாக பாடசாலைக்கு வரும்போது, உங்கள் பிள்ளைகளை அனுப்புங்கள். நாங்கள் பிள்ளைகளுக்கு கற்பித்தல் செயற்பாடுகளைச் செய்ய தயாராக இருக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SrilnkaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

13 2
இந்தியாசெய்திகள்

இஸ்ரேலில் இருந்து நாடு திரும்ப எதிர்பார்க்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு!

இஸ்ரேலின் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு, இலங்கைக்கு பயணிக்க விரும்புவோருக்கு அறிவிப்பொன்று வெளியிடப்பட்டுள்ளது. இவ்வாறு இஸ்ரேலில் இருந்து...

25 684a2fdb31138 1
இந்தியாசெய்திகள்

இந்தியாவில் அவசரமாக தரை இறங்கிய இங்கிலாந்து விமானம்

இங்கிலாந்தின்(UK) எப்-35 போர் விமானம் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரை இறங்கியுள்ளதாக இந்திய...

25 684a1d46ac31b
இந்தியாசெய்திகள்

இந்தியா – இலங்கை ஒப்பந்தம் குறித்து வெளியாகியுள்ள சந்தேகம்

இந்தியாவின் இணக்கப்பாடு இன்றி இரு நாடுகளுக்கும் இடையிலான உடன்படிக்கையை அம்பலப்படுத்த முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளதாக...