மண்ணுக்குள் மறைந்த சோழர் காலத்து கோவில்!-மண்ணித்தலை ஆதி சிவன் ஆலயம்

MANNITHALAI KRUVOOKAL THUMBNAIL 1 1

ஆதிகால கோவில்கள் பல இலங்கையிலும் காணப்படுகின்றன. அவற்றுள் மிக முக்கியமான ஒரு கோவிலாக கிளிநொச்சி மண்ணித்தலை சிவன் ஆலயம் காணப்படுகின்றது.

மண்ணித்தலை சிவன் கோவிலானது கிளிநொச்சி மாவட்டம் பூநகரி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள மிகவும் தொன்மையாக வரலாற்று எச்சமாக காணப்படுகின்ற அதேவேளை தமிழர்களை மத வழிபாட்டினையம் தொன்மையினையும் பிரதிபலிக்கும் ஓர் மிக முக்கியமான அடையாளமாக கொள்ளப்படுகின்றது.

குறித்த மத தளமானது ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணுறுகளில் அடையாளம் காணப்பட்டுள்ளது. அக்காலம் முதலே குறித்த மத தலத்தினை புனர்நிர்மாணம் செய்வதற்கும், மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்கும் பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதும் – அக்கலப்பகுதி இலங்கையில் போர் மேகம் சூழ்ந்துநின்ற நெருக்கடியான காலம் என்பதால் குறித்த நடவடிக்கைகள் பிற்போடப்பட்டுக்கொண்டே சென்றன.

#Historical #Place #Mannithalai

Exit mobile version