பிரித்தானியா
உலகம்ஏனையவைசெய்திகள்

பிரித்தானியாவில் 7 வயது சிறுமிக்கு நிகழ்ந்த சோகம்: 14 வயது சிறுவன் கைது

Share

பிரித்தானியாவில் 7 வயது சிறுமிக்கு நிகழ்ந்த சோகம்: 14 வயது சிறுவன் கைது

பிரித்தானியாவில் 7 வயது சிறுமி விபத்துக்குள்ளாகி உயிரிழந்ததை தொடர்ந்து 14 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பிரித்தானியாவின் வெஸ்ட் மிட்லாண்ட் பகுதியில் உள்ள வால்சால்(Walsall) சாலையில் 14 வயது சிறுவன் ஒருவர் 7 வயது சிறுமி மீது தன்னுடைய மோட்டார் பைக்-ஆல் மோதி விபத்து ஏற்படுத்தியுள்ளார்.

இதில்  7 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு இரவு 7 மணியளவில் விரைந்து சென்ற பொலிஸார் நிலைமையை ஆராய்ந்தனர்.

அத்துடன் விபத்து ஏற்படுத்திய 14 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் விபத்து நடந்த மாதிரியை உருவாக்கும் முயற்சியில் சிறுவன் ஓட்டிச் சென்ற நீலம் மற்றும் கருப்பு நிறம் கொண்ட மோட்டார் பைக்கை பொலிஸார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளுமாறு துப்பறிவாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வெஸ்ட் மிட்லாண்ட் பொலிஸ் அதிகாரி DS பால் ஹியூஸ் பேசிய போது, இது மிகவும் மோசமான நிகழ்வு இதன் விளைவாக அப்பாவி குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

ஆனால் நாங்கள் இன்னும் விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளை தேடிக் கொண்டு இருக்கிறோம், எனக்கு தெரியும் இங்குள்ள உள்ளூர் மக்களுக்கு அந்த மோட்டார் சைக்கிள் எங்கு இருக்கும் என்று, எனக்கு தேவை எல்லாம் உள்ளூர் சமூகம் விசாரணைக்கு உதவ வேண்டும் என்பது தான்.

இது மக்களை பாதுகாப்பது பற்றியது அல்ல, சரியானவற்றை செய்வது பற்றியது என்று விசாரணை அதிகாரி பால் ஹியூஸ் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...