202104050046437788 137 people arrested for alcoholism SECVPF
ஏனையவை

பசு மாடு ஒன்றினை நடத்தி சென்றவர் கைது!!

Share

தற்பொழுது வடமாகாணத்தில் கால்நடைகளை எடுத்து செல்வதற்கு கால்நடை மற்றும் உற்பத்தி சுகாதார திணைக்களம் இடைக்கால தடை விதித்துள்ள நிலையில், அச்சுவேலி தோப்பு பகுதியில் இருந்து ஐந்து சந்தி பகுதிக்கு பசு மாடு ஒன்றினை கால்நடையாக நடத்திக்கொண்டு சென்றவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.

தற்பொழுது வடமாகாணத்தில் கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் பரவி வருகின்றது.

இதனை அடுத்து மாகாணங்களுக்கு இடையிலும் பிரதேச செயலகங்களுக்கு இடையிலும் கால்நடைகளை வாகனங்களில் எடுத்து செல்வதற்கு முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொலிசாரை ஏமாற்றி, வளர்ப்புகென பொய் கூறி பசு மாடு ஒன்றினை நடத்திக் கொண்டு சென்றமை தொடர்பில் அச்சுவேலி பொலிஸாருக்கு தகவல் ஒன்று கிடைக்கப்பெற்று இருந்தது.

உப பொலிஸ் பரிசோதகர் ஜெனா தலைமையிலான போலீஸ் குழுவினர் சந்தேகத்துக்கு இடமாக மாட்டினை கொண்டு சென்றவரை விசாரணை செய்த பொழுது எந்த வித தகுந்த ஆதாரங்களும் இன்றி எடுத்துச் சென்றமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது குறித்து பசுமாடு பொலிஸ் நிலையத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளது. நடத்திச் சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் இரண்டாயிரம் ரூபாய் பணத்துக்காக கால்நடைகளை நடத்தி ஐந்து சந்திப் பகுதியில் உள்ள இறைச்சி வியாபாரி ஒருவருக்கு கொடுப்பதனை வழமையாக கொண்டு வந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

சம்பவம் தொடர்பில் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தின் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 7
ஏனையவை

கொழும்பில் பிரபல சுப்பர் மார்க்கெட்டுகளின் மோசமான செயல் – அபராதம் விதிப்பு

கொழும்பில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட மற்றும் மட்டக்குளிய...

25 6848f21beec56
ஏனையவை

புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் பல கைதிகள் முறைகேடான வழியில் விடுவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான கைதிகள்...

25 683cefcc4dfbd
ஏனையவை

அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்!

யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம்...

images 1 2
ஏனையவை

சரிகமப 5வது சீசனில் கலக்கிய முன்னணி நடிகையின் மகள்..! ஆடிஷனில் செம பாராட்டு..

ரியாலிட்டி ஷோக்களுக்கு இன்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக சரிகமப, சூப்பர்...