mw
ஏனையவை

“தனிமையை காதலிக்கிறேன்” – தன்னைத் தானே திருமணம் செய்துகொண்ட பிரபல மொடல்!

Share

பிரேசில் நாட்டைச் சேர்ந்த அழகி ஒருவர் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மணமுறிவு காரணமாக இந்த முடிவை எடுத்துள்ளேன் என அவர் தெரிவித்துள்ளார்.இந்த அதிசய முடிவு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த மொடல் அழகியின் திருமணம் (வயது-33) பிரேசிலின் பிரபல கத்தோலிக்க தேவாலயத்தில் இடம்பெற்றுள்ளது. திருமணத்தில் அவரது பெற்றோர். நண்பர்கள் உள்ளிட்ட பலர் பங்குபற்றியுள்ளனர்.

தனது இந்த திருமண முடிவு குறித்து மொடல் அழகி கிரிஸ் கேலரா தெரிவிக்கையில்,
“எனது சொந்த வாழ்க்கையில் நான் முகம்கொடுத்த பல்வேறு பிரச்சினைகள் என்னை இந்த முடிவுக்கு தூண்டின. இதனால் தனிமையில் வாழ்வது சிறந்த உணர்வு என்று புரிந்துகொண்டேன். இதனை கொண்டாடும் வகையில் என்னை நானே திருமணம் செய்துள்ளேன்.” – என்றுள்ளார்.

இந்த வினோத திருமணங்கள் பலரால் அதிசயிக்கப்பட்டு பார்க்கப்பட்டாலும், வேறு பலரால் விமர்சிக்கப்பட்டும் வருகின்றன. எனினும் உலகில் அண்மைக்காலமாக இவ்வாறான வினோத திருமணங்கள் அதிகரித்துள்ளன.

செக்ஸ் பொம்மையை திருமணம் செய்துகொண்ட பாடிபில்டர், ஒரு ஆண் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்வது, ஒரு பெண் தன்னைத்தானே திருமணம் செய்துகொள்வது போன்ற வினோத திருமணங்கள் அண்மையில் இடம்பெற்றிருந்தன. அந்த வகையில், தற்போது இந்த வினோத பட்டியலில் பிரேசில் பிரபல மொடல் அழகி கிரிஸ் கேலராவும் இணைந்துள்ளார்.

mo mod

model

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
19 4
ஏனையவை

சிறைச்சாலை அதிகாரிகள் பலருக்கு அதிரடி இடமாற்றம்!

சிறைச்சாலைத் திணைக்களத்தின் முக்கிய அதிகாரிகள் பலருக்கும் அவர்கள் பணியாற்றி இடங்களில் இருந்து அதிரடியாக இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 7
ஏனையவை

கொழும்பில் பிரபல சுப்பர் மார்க்கெட்டுகளின் மோசமான செயல் – அபராதம் விதிப்பு

கொழும்பில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட மற்றும் மட்டக்குளிய...

25 6848f21beec56
ஏனையவை

புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் பல கைதிகள் முறைகேடான வழியில் விடுவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான கைதிகள்...

25 683cefcc4dfbd
ஏனையவை

அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்!

யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம்...