24 673d927dcd2cb
ஏனையவை

நாட்டில் வெங்காயத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Share

நாட்டில் வெங்காயத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பெரிய வெங்காயத்தின் விலை திடீரென அதிகரித்துள்ளதாக தம்புள்ளை பொருளாதார மத்திய வர்த்தக சங்கம் தெரிவித்துள்ளது.

ஒரு கிலோ உள்நாட்டு பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 400 ரூபாவாகவும் ஒரு கிலோ வெளிநாட்டு வெங்காயத்தின் மொத்த விலை 370 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.

இதன்படி இன்று (20) காலை தம்புள்ளை (Dambulla) பொருளாதார நிலையத்தில் ஒரு கிலோ உள்நாட்டு பெரிய வெங்காயத்தின் மொத்த விலை 380 – 400 ரூபாவாக இருந்ததாக வர்த்தகர்கள் சுட்டிக்காட்டினர்.

இந்தியா (India), பாகிஸ்தான், தூத்துக்குடி, ஈரான் உள்ளிட்ட பல நாடுகளிலிருந்து பெரிய வெங்காயம் இறக்குமதி செய்வது மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பெரிய வெங்காயத்தின் விலை ஒரேயடியாக அதிகரித்துள்ளதாக வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர்

மிகக் குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகள் இந்த விலை உயர்வைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட போதிலும், கடந்த காலங்களில் உள்நாட்டு பெரிய வெங்காயத்தை விவசாயிகளிடம் இருந்து மிகக் குறைந்த விலைக்கு வாங்கிய வணிகர்கள் வெங்காயத்தை மறைத்து வைத்து விலை ஏற்றம் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலைய வர்த்தக சங்கத்தின் தலைவர் சி.எஸ்.சிறிவர்தன தொடர் மழைவீழ்ச்சி காரணமாக தரமான வெங்காயம் கிடைக்காமையினால் தரமான வெங்காயத்திற்கான கேள்வி அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.

எதிர்காலத்தில் ஓரளவிற்கு விலை அதிகரிக்கலாம் எனவும், எனினும் அடுத்த ஒரு மாதத்தில் அதிகளவிலான பெரிய வெங்காயம் வெளிநாடுகளிலிருந்து ஓடர் செய்யப்பட்டுள்ளதாகவும், அவை கிடைக்கும் போது விலை குறையும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Share
தொடர்புடையது
14 11 2025 819486 850x460
ஏனையவை

சந்தேகங்களை விடுத்து தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு!

ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதை விடுத்து, நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் தத்தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற...

MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...

articles2FyEG6lrLYMw8L60exw5pH
ஏனையவை

காணி உரிமை வழங்கினால் மலையக வீட்டுப் பிரச்சினை தீரும் – ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில்...