கடன் வாங்கும் வரம்பை அதிகரிக்க கோரி அரசாங்கம் நாடாளுமன்றத்திடம் கோரிக்கை!! வெளியான தகவல்
அரசியல்இலங்கைஏனையவைசெய்திகள்

கடன் வாங்கும் வரம்பை அதிகரிக்க கோரி அரசாங்கம் நாடாளுமன்றத்திடம் கோரிக்கை!! வெளியான தகவல்

Share

கடன் வாங்கும் வரம்பை அதிகரிக்க கோரி அரசாங்கம் நாடாளுமன்றத்திடம் கோரிக்கை!! வெளியான தகவல்

ஒதுக்கீட்டுச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதன் மூலம் பொதுச் செலவுகளுக்கு நிதியளிப்பதற்காக, கடன் வாங்கும் வரம்பை 9,000 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் நாடாளுமன்றத்தின் அனுமதியை கோரியுள்ளது.

நாட்டிற்கான நிதி திரட்ட சர்வதேச சந்தைக்கான அணுகலை இழந்துள்ள நிலையில், உள்நாட்டு கடன்கள் மூலம் கடன் சேவை கொடுப்பனவுகள், தொடர்ச்சியான செலவுகள் மற்றும் நலன்புரி செலவுகளை ஈடுசெய்ய அரசாங்கத்திற்கு இந்த திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடன் பெறுவதற்கான உச்ச வரம்பு தற்போது 4,979 பில்லியனாக உள்ள நிலையில் 13,979 பில்லியனாக அதிகரிப்பதற்கான சட்டமூலத்தை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த புதன்கிழமை வெளியிட உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் பொது நிதி தொடர்பான அதிகாரங்கள் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளதால், 2022 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தை திருத்துவதன் மூலம் திறைசேரி நடவடிக்கைகளின் சேவைச் செலவு மற்றும் மூலதனச் செலவினங்களை அதிகரிக்க, நாடாளுமன்றில் அனுமதி கோரப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...