கடன் வாங்கும் வரம்பை அதிகரிக்க கோரி அரசாங்கம் நாடாளுமன்றத்திடம் கோரிக்கை!! வெளியான தகவல்
அரசியல்இலங்கைஏனையவைசெய்திகள்

கடன் வாங்கும் வரம்பை அதிகரிக்க கோரி அரசாங்கம் நாடாளுமன்றத்திடம் கோரிக்கை!! வெளியான தகவல்

Share

கடன் வாங்கும் வரம்பை அதிகரிக்க கோரி அரசாங்கம் நாடாளுமன்றத்திடம் கோரிக்கை!! வெளியான தகவல்

ஒதுக்கீட்டுச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதன் மூலம் பொதுச் செலவுகளுக்கு நிதியளிப்பதற்காக, கடன் வாங்கும் வரம்பை 9,000 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் நாடாளுமன்றத்தின் அனுமதியை கோரியுள்ளது.

நாட்டிற்கான நிதி திரட்ட சர்வதேச சந்தைக்கான அணுகலை இழந்துள்ள நிலையில், உள்நாட்டு கடன்கள் மூலம் கடன் சேவை கொடுப்பனவுகள், தொடர்ச்சியான செலவுகள் மற்றும் நலன்புரி செலவுகளை ஈடுசெய்ய அரசாங்கத்திற்கு இந்த திட்டம் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கடன் பெறுவதற்கான உச்ச வரம்பு தற்போது 4,979 பில்லியனாக உள்ள நிலையில் 13,979 பில்லியனாக அதிகரிப்பதற்கான சட்டமூலத்தை நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கடந்த புதன்கிழமை வெளியிட உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் பொது நிதி தொடர்பான அதிகாரங்கள் நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ளதால், 2022 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தை திருத்துவதன் மூலம் திறைசேரி நடவடிக்கைகளின் சேவைச் செலவு மற்றும் மூலதனச் செலவினங்களை அதிகரிக்க, நாடாளுமன்றில் அனுமதி கோரப்பட்டுள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...