24 662f0411a01d0
இலங்கைஏனையவைசெய்திகள்

மெய்சிலிரிக்க வைத்த இலங்கை தமிழ் இளைஞரின் திறமை

Share

மெய்சிலிரிக்க வைத்த இலங்கை தமிழ் இளைஞரின் திறமை

இலங்கை இளைஞர் ஒருவர் இந்திய தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இசை போட்டி நிகழ்ச்சி ஒன்றின் குரல் தெரிவு சுற்றில் போட்டியாளராக தெரிவாகியுள்ளார்.

மலையகத்தின் பதுளையை சேர்ந்த இந்திரஜித் என்ற இளைஞரே இவ்வாறு இசை போட்டி நிகழ்ச்சிக்கு தேர்வாகியுள்ளார்.

பிரபல பாடகர் எஸ்.பி.பி.யின் தீவிர இரசிகரான இவர் பாடும் நிலாவின் பாடல்களை திறமையாக பாடியதை பார்த்தும் கேட்டும் இசை அரங்கமே ஆர்ப்பரித்தது.

இந்திரஜித் குறித்த போட்டியில் பங்குபற்றி சிறப்பாக பாடல்களை பாடியதுடன், நடுவர்களின் பாராட்டுகளையும் பெற்றுள்ளார்.

முன்னதாக மலையகத்திலிருந்து இந்தியாவுக்கு சென்று குறித்த தென்னிந்திய இசை நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற அசானியையடுத்து, தாய்மண்ணுக்கு பெருமை சேர்ப்பதற்காக இசை மேடையேறியிருக்கும் இந்திரஜித்தின் இந்த இசை முயற்சி பலரால் பேசப்படுகிறது.

மேலும் இலங்கையில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த கில்மிசா தென்னிந்திய இசை நிகழ்ச்சியில் பங்குபற்றி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...