10 12
இலங்கைஏனையவைசெய்திகள்

வெளிநாடுகளில் கோடிக்கணக்கான பணத்தை வைப்பிலிட்டுள்ள அரசியல்வாதிகள்

Share

வெளிநாடுகளில் கோடிக்கணக்கான பணத்தை வைப்பிலிட்டுள்ள அரசியல்வாதிகள்

வெளிநாடுகளில் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களில் கோடிக்கணக்கான பணத்தினை வைப்பிலிட்டுள்ளதாக கூறப்படும் 13 அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் குறித்து அரசின் புலனாய்வு அமைப்புகள் விசாரணையை தொடங்கியுள்ளன.

குறித்த நிதி நிறுவனங்களிடம் இருந்து அது பற்றிய தகவல் அறிக்கைகளை பெறுவது முதல் நடவடிக்கை என்று அந்த அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.

வெளிநாடுகளில் பணத்தை வைப்பு செய்யும் முறைகள் குறித்து இந்த நாட்களில் சிறப்பு ஆய்வு நடத்தப்பட்டு வருவதாகவும் புலனாய்வு அமைப்புகள் குறிப்பிடுகின்றன.

இந்த பணிகள் கடினமானதாக இருந்தாலும், அதற்காக உன்னிப்பாக செயற்பட்டு வருவதாகவும், இதுபற்றிய தகவல் யாருக்கேனும் தெரிந்தால் சமர்ப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது வெளிநாடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ள பணத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு அரசியல்வாதிகள் உட்பட பல்வேறு நபர்கள் செயற்படுவதாக சில அரசியல் மேடைகளில் குறிப்பிடப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Motorcycle Accidnet
இலங்கை

இளைஞரின் உயிரை பறித்த மோட்டார் சைக்கிள்.

களுத்துறை மாவட்டம், மில்லேவ பகுதியில் நேற்றைய தினம் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் 29 வயதுடைய...

eids
இலங்கை

இலங்கையில் பரவலடையும் நோய்கள் – மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை.

  நாட்டில் எய்ட்ஸ் அல்லாத பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாலியல் நோய்த்தொற்றுகள்  பதிவாகியுள்ளதுடன் , குறித்த நோயாளிகள்...

negambo
இலங்கை

அனுர அரசை கவிழ்க்க சிறையில் தீட்டப்பட்ட சதித்திட்டம்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தை கவிழ்க்கும் மாபெரும் சதித் திட்டம் ஏதாவது நீர்கொழும்பு சிறைச்சாலையில்...

preschool kids
இலங்கை

அனைவரும் சமம் – அரசாங்கம் கொண்டுவரும் சிறந்த திட்டம்.

  அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில் கலந்து...