24 662ef7eccb6c8
இலங்கைஏனையவைசெய்திகள்

நாடாளுமன்றம் கலைக்கப்படுமா..! அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு

Share

நாடாளுமன்றம் கலைக்கப்படுமா..! அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு

நாடாளுமன்றம் இன்று (29) கலைக்கப்படவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஒன்று பரவியுள்ளது.

பொதுஜன பெரமுண ஸ்தாபகர் பசில் ராஜபக்‌ச, அண்மையில் இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா உடன் திடீர் சந்திப்பொன்றை நடத்தியிருந்தார்.

அதன் பின்னணியில் நாடாளுமன்ற கலைப்பு தொடர்பான விவகாரம் இருக்கக் கூடு்ம் என்றும் இன்று (29) பெரும்பாலும் நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்றும் சமூக வலைத்தளங்களில் மட்டுமன்றி அரசியல் வட்டாரங்களிலும் பெரும் பரபரப்பு தொற்றியுள்ளது.

எனினும் அரசாங்கத்தின் உயர்மட்ட தகவல்களின் பிரகாரம் தற்போதைக்கு நாடாளுமன்றத்தைக் கலைக்கும் உத்தேசம் இல்லை என்றும் அமைச்சரவையில் சிறியதொரு மாற்றம் நிகழ்வதற்கான வாய்ப்புகள் மட்டும் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
exam hall 1
இலங்கை

புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் எப்போது வெளியாகும்?

ஒரு மாத காலத்திற்குள் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர்...

arested 1
இலங்கை

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் முக்கிய உறுப்பினர் போதைப்பொருள் கடத்தியமையினால் கைது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொலன்னறுவை, மெதிரிகிரிய தேர்தல் தொகுதி தலைவரும் அவரது மனைவியும், ஐஸ் மற்றும் ஹெரோயின்...

போலி நாணயத்தாள்
இலங்கை

தமிழர் பகுதியில் போலி நாணயத்தாள்களுடன் இருவர் கைது!

கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் வங்கியொன்றில் வைப்பிலிடுவதற்காக இரு போலி நாணயத்தாள்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் இரு சந்தேகநபர்கள்...

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு
இலங்கை

சர்வஜன அதிகாரத்துடன் இணைந்த மொட்டு!

நாவலப்பிட்டி தொகுதியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் அமைப்பாளர் கே.எல்.ஏ. குணசிங்க உள்ளிட்ட தொகுதிப் பிரதிநிதிகள்...