anu 2
ஏனையவைஇலங்கைசெய்திகள்

கட்டுப்பாட்டை இழந்த ஓட்டோ வாய்க்காலுக்குள் வீழ்ந்து விபத்து

Share

வேகக்கட்டப்பாட்டை இழந்து வீதியால் சென்றவர்கள் மீது மோதி வாய்க்காலுக்குள் பாய்ந்து ஓட்டோ ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்ற நிலையில் ஓட்டோவின் சாரதி தப்பியோடியுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி 5 அடி வான் பகுதியில் வேகக்கட்டப்பாட்டை இழந்த ஓட்டோ வீதியால் சென்றவர்களை மோதித் தள்ளி வாய்க்காலுக்குள் பாய்ந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் எவரும் பெரிய காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரியவருகின்றது.

ஓட்டோ நீரில் மூழ்கிய நிலையில் அதனை செலுத்திவந்த சாரதி அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார் என அங்கு நேரில் பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார மேற்கொண்டு வருகின்றனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
40 1
உலகம்செய்திகள்

உலகின் சிறந்த 10 வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் – ரஷ்யாவின் S-400 முதல் இஸ்ரேலின் Iron Dome வரை

இன்றைய நவீன போர் சூழலில், வான்வழி பாதுகாப்பு அமைப்புகள் ஒரு நாட்டின் பாதுகாப்புக்கான முதன்மை ஆயுதமாக...

39 1
உலகம்செய்திகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள்

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் இந்திய சுற்றுலாப் பயணிகள் ரூ.4,000 கோடியை செலவிட்டுள்ளனர். துருக்கியின் சுற்றுலாத்...

38 1
உலகம்செய்திகள்

இந்த காரணங்களால் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதப் போரில் ஈடுபடாது… விரிவான பின்னணி

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு இந்தியாவின் இராணுவ பதிலடி நடவடிக்கையான ஆபரேஷன் சிந்தூரை அடுத்த நாட்களில், இந்த...

26 7
இலங்கைசெய்திகள்

இறம்பொடையில் மற்றுமொரு விபத்து: 12 பேர் படுகாயம்

நுவரெலியா – கண்டி வீதியில் இறமம்பொட ஒத்த கடை அருகே வான் ஒன்று பாதையிலிருந்து கவிழ்ந்து...