5 20
ஏனையவை

சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய எல்லைப் பாதுகாப்பு படை உறுப்பினர் விடுவிப்பு

Share

பாகிஸ்தான் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய எல்லைப் பாதுகாப்பு படை உறுப்பினர் பூர்ணம் குமார் ஷா, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக, இந்திய எல்லை பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.

இந்திய எல்லை பாதுகாப்புப் படையில், கொன்ஸ்டபிளாக பணிபுரியும் பூர்ணம் குமார் ஷா. பஞ்சாபின் பெரோஸ்பூரில், இந்திய – பாகிஸ்தான் எல்லையில் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 20 நாட்களுக்கு முன்னர்,ஏப்ரல் 23 ஆம் திகதியன்று, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் சூழல் நிலவிய போது, அவரை பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் கைது செய்தனர்.

தவறுதலாக பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜலோக் தோனா பகுதிக்குச் சென்ற போதே, பாகிஸ்தான் இராணுவத்தால், அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவி வந்த மோதல் முடிவுக்கு வந்து, போர் நிறுத்தமும் நடைமுறைக்கு வந்துள்ளதை அடுத்து, இன்று முற்பகல் 10.30 மணிக்கு அட்டாரி-வாகா எல்லை வழியாக, அவரை அழைத்து வந்து பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள், இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Share
தொடர்புடையது
1 11
உலகம்ஏனையவைசெய்திகள்

உலகின் முதல் ட்ரோன் போர்! அணு ஆயுத எச்சரிக்கை விளிம்பில் இந்தியா – பாகிஸ்தான்

அணு ஆயுதம் ஏந்திய அண்டை நாடுகளுக்கு இடையேயான உலகின் முதல் ட்ரோன் போர் தெற்காசியாவில் வெடித்துள்ளது....

tamilnaadi
ஏனையவை

இன்றைய ராசி பலன் 09 மே 2025 – Daily Horoscope

இன்றைய ராசிபலன் 8.05. 2025, விசுவாசுவ வருடம் சித்திரை மாதம் 23 வெள்ளிக் கிழமை, சந்திரன்...

17 7
ஏனையவை

ஆபரேஷன் சிந்தூர்: கணவனை இழந்த பெண்ணின் உருக்கமான வார்த்தைகள்

பஹல்காம் தாக்குதலில் கணவனை இழந்த பெண்ணொருவர், ஆபரேஷன் சிந்தூருக்காக இந்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்....

2 17
ஏனையவை

முல்லைத்தீவில் அனைத்து பிரதேச சபைகளையும் தன்வசமாக்கிய தமிழரசுக் கட்சி!

நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் முல்லைத்தீவு மாவட்டத்திற்கான அனைத்து முடிவுகளும் வௌியாகியுள்ளன. இதற்கமைய மாந்தை கிழக்கு...