5 20
ஏனையவை

சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய எல்லைப் பாதுகாப்பு படை உறுப்பினர் விடுவிப்பு

Share

பாகிஸ்தான் படையினரால் சிறைப்பிடிக்கப்பட்ட இந்திய எல்லைப் பாதுகாப்பு படை உறுப்பினர் பூர்ணம் குமார் ஷா, இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டதாக, இந்திய எல்லை பாதுகாப்பு படை அறிவித்துள்ளது.

இந்திய எல்லை பாதுகாப்புப் படையில், கொன்ஸ்டபிளாக பணிபுரியும் பூர்ணம் குமார் ஷா. பஞ்சாபின் பெரோஸ்பூரில், இந்திய – பாகிஸ்தான் எல்லையில் பணிபுரிந்து வருகிறார்.

கடந்த 20 நாட்களுக்கு முன்னர்,ஏப்ரல் 23 ஆம் திகதியன்று, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் பதற்றம் சூழல் நிலவிய போது, அவரை பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள் கைது செய்தனர்.

தவறுதலாக பாகிஸ்தான் எல்லையில் உள்ள ஜலோக் தோனா பகுதிக்குச் சென்ற போதே, பாகிஸ்தான் இராணுவத்தால், அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், இந்தியா, பாகிஸ்தான் இடையே நிலவி வந்த மோதல் முடிவுக்கு வந்து, போர் நிறுத்தமும் நடைமுறைக்கு வந்துள்ளதை அடுத்து, இன்று முற்பகல் 10.30 மணிக்கு அட்டாரி-வாகா எல்லை வழியாக, அவரை அழைத்து வந்து பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகள், இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Share
தொடர்புடையது
MediaFile 1 2
ஏனையவை

யாழ் – பண்ணைக் கடலில் சோகம்: நீராடச் சென்ற 2 இளைஞர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் – பண்ணைக் கடல் பகுதியில் இன்று (டிசம்பர் 7) மாலை நீராடச் சென்ற கொக்குவில்...

DSC 4424
ஏனையவை

சிவனொளிபாதமலைக்கு ஹட்டன் வழியாகப் பிரவேசிப்பது மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

சீரற்ற காலநிலை காரணமாக, சிவனொளிபாத மலைக்கு (Sri Pada/Adam’s Peak) செல்வதற்கான ஹட்டன் அணுகல் வீதியிலுள்ள...

images 5
ஏனையவை

காணாமல் போன மலேசிய விமானத்தைத் தேடும் பணிகள் மீண்டும் ஆரம்பம்: டிசம்பர் 30-இல் தேடல் தொடக்கம்!

காணாமல் போய் ஒரு தசாப்தத்திற்கும் (பத்து ஆண்டுகள்) மேலாகியும் கண்டுபிடிக்கப்படாத மலேசிய வானூர்தியை (MH370) தேடும்...

images 4
ஏனையவை

தேசிய அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்கள்: 22 மாவட்டங்கள் அதிவிசேட வர்த்தமானி மூலம் அறிவிப்பு!

‘டித்வா’ சூறாவளியின் தாக்கத்தினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் பாதிக்கப்பட்ட நாட்டின் 22 நிர்வாக மாவட்டங்கள்...