7 4
உலகம்ஏனையவைசெய்திகள்

இந்தியாவின் இராணுவ ஊடுருவல்! தயார் நிலையில் பாகிஸ்தான்…

Share

இந்தியாவின் இராணுவ ஊடுருவல் விரைவில் நிகழும் என்று பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் எச்சரித்துள்ளார்.

சர்வதேச ஊடகம் ஒன்றுடன் வழங்கிய நேர்காணலில் இதனை கூறியுள்ளார்.

இந்தியாவின் இராணுவ ஊடுருவல் “உடனடியான ஒன்று” என்று அவர் விளக்கமளித்துள்ளார்.

இந்த தாக்குதல் உடனடியான ஒன்று என்பதால் நாங்கள் எங்கள் படைகளை பலப்படுத்தியுள்ளோம் எனவும் கூறியுள்ளார்.

எனவே அந்த சூழ்நிலையில் சில மூலோபாய முடிவுகள் எடுக்கப்பட வேண்டும் எனவும், கவாஜா விளக்கியுள்ளார்.

எனவே பல இராஜதந்திர முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன, என்று கவாஜா சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்நிலையில், இந்தியாவிற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பிணைப்பு உடைக்க முடியாதது என்றும், அது மக்கள், அரசாங்கங்கள், தலைவர்களுக்கு இடையிலான பிணைப்பு எனவும் அந்நாட்டு தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு காஷ்மீரில் நாம் கண்டது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதுவர் கூறியுள்ளார்.

நான் பார்த்த புகைப்படங்கள் மனதை உடைப்பதாக இருந்தன என்றும் கூறியுள்ளார். பயங்கரவாதத்திற்கு எதிராக நாம் மிகவும் உறுதியுடன் போராட வேண்டும் என்றும், பயங்கரவாதிகள் ஏதாவது செய்தால், அவர்கள் அதற்கு விலை கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....