omicron 2
ஏனையவை

ஒமிக்ரோன் பரவலை கட்டுப்படுத்த தயாராகும் இந்தியா!

Share

18 இலட்சம் தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள் ஒமிக்ரோன் பரவலை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் தயார் நிலையில் உள்ளதாக மத்திய அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

17 மாநிலங்களில் 358 பேருக்கு ஒமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை கட்டுப்படுத்துவதற்காக குறித்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 21 ஆம் திகதி அதிகளவானோரைக் கொண்ட கூட்டங்கள் மற்றும் இரவு நேர ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன் தெரிவித்தார்.

18 இலட்சத்து 10 ஆயிரத்து 83 தனிமைப்படுத்தப்பட்ட படுக்கைகள், 4 இலட்சத்து 94 ஆயிரத்து 314 ஒக்சிஜன் படுக்கைகள், 1 இலட்சத்து 39 ஆயிரத்து 300 தீவிர சிகிச்சைப் படுக்கைகள் என்பன நாடு முழுவதும் தயார் நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

#IndiaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered Recovered 7
ஏனையவை

கொழும்பில் பிரபல சுப்பர் மார்க்கெட்டுகளின் மோசமான செயல் – அபராதம் விதிப்பு

கொழும்பில் காலாவதியான உணவுப்பொருட்களை விற்பனை செய்த சுப்பர் மார்க்கெட்டுகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தெமட்டகொட மற்றும் மட்டக்குளிய...

25 6848f21beec56
ஏனையவை

புதிய அரசாங்கத்தின் பதவிக் காலத்தில் பல கைதிகள் முறைகேடான வழியில் விடுவிப்பு

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னரான காலப்பகுதியில் மட்டும் நூற்றுக்கும் அதிகமான கைதிகள்...

25 683cefcc4dfbd
ஏனையவை

அச்சுவேலியில் பெண் தலைமைத்துவ குடும்பத்தின் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள்!

யாழ். அச்சுவேலி பகுதியில் பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று வாழ்வாதாரத்துக்காக வளர்த்து வந்த கோழிகளுக்கு விஷம்...

images 1 2
ஏனையவை

சரிகமப 5வது சீசனில் கலக்கிய முன்னணி நடிகையின் மகள்..! ஆடிஷனில் செம பாராட்டு..

ரியாலிட்டி ஷோக்களுக்கு இன்று மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. குறிப்பாக சரிகமப, சூப்பர்...