IMG 20230111 134430 1
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழீழ வைப்பக நகைகள் எங்கே? – நாடாளுமன்றத்தில் சிறிதரன் கேள்வி! அரசாங்கத்தின் வாக்குறுதியை நினைவூட்டல்!

Share

யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், இன்றைய நாடாளுமன்ற அமர்வில் கலந்துகொண்டு, போர்க்காலத்தின் போது தமிழீழ வைப்பகத்தில் (Tamil Eelam Bank) அடகு வைக்கப்பட்ட நகைகளை உரியவர்களிடம் ஒப்படைக்க அரசாங்கம் தவறிவிட்டதாகக் கடும் அதிருப்தியை வெளியிட்டார்.

சிறிதரன் தனது உரையில், 2024 ஆம் ஆண்டு ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் பிரசாரங்களின் போது, தமிழீழ வைப்பகத்தில் வைக்கப்பட்ட நகைகள் மீள ஒப்படைக்கப்படும் எனத் தற்போதைய அரசாங்கம் பகிரங்கமாக உறுதியளித்திருந்தது.

புதிய அரசாங்கம் பதவியேற்று ஓராண்டு காலம் கடந்துள்ள நிலையிலும், இந்த விவகாரம் தொடர்பாகத் தமிழ் மக்களுக்கு இதுவரை எந்தவொரு சாதகமான செய்தியும் கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டார்.

இறுதி யுத்தத்தின் போது தமது வாழ்நாள் சேமிப்பான நகைகளை இழந்த மக்கள், இன்று கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிப்பதாகவும், அவர்களின் மனநிலையை இந்த அரசு கருத்தில் கொள்ளவில்லை என்றும் அவர் சாடினார்.

“மக்களின் நகைகள் தற்போது எங்கே உள்ளன? அவற்றை உரியவர்களிடம் மீண்டும் ஒப்படைப்பதற்கான ஏதேனும் முறையான வேலைத்திட்டம் அரசாங்கத்திடம் உள்ளதா?” என அவர் நேரடியாகக் கேள்வியெழுப்பினார்.

யுத்த காலத்தின் போது வடக்கு – கிழக்கில் இயங்கி வந்த தமிழீழ வைப்பகங்களில் மக்கள் பெருமளவிலான நகைகளை அடகு வைத்திருந்தனர். யுத்த முடிவின் பின்னர் பாதுகாப்புத் தரப்பினரால் கைப்பற்றப்பட்ட இந்த நகைகளில் ஒரு தொகுதி ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன் விடுவிக்கப்பட்ட போதிலும், கணிசமான அளவு நகைகள் இன்னும் மத்திய வங்கியின் வசமே உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இதனை முழுமையாக விடுவிக்கக் கோரி சிறிதரன் தனது கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...