image 9653c01cae
செய்திகள்இலங்கை

ஓய்வூதியம் என்பது பாதுகாப்பு, சலுகையல்ல: ஜனாதிபதிக்கு கரு ஜயசூரிய அவசரக் கடிதம்!

Share

நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியத்தை ரத்து செய்யும் அரசாங்கத்தின் தீர்மானம் குறித்து, முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு விசேட கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சங்கத்தின் காப்பாளர் என்ற ரீதியில் அவர் இக்கடிதத்தை எழுதியுள்ளார்.

ஓய்வூதியத்தை ரத்து செய்வதால் ஏற்படக்கூடிய சமூக மற்றும் அரசியல் விளைவுகள் குறித்து அவர், 1956-ஆம் ஆண்டிற்குப் பின்னரே சாதாரண மனிதர்களுக்கும் அரசியலில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. ஓய்வூதியம் இல்லையெனில், அரசியல் மீண்டும் செல்வந்தர்கள் மற்றும் பெரும் தொழிலதிபர்களின் வசமாகிவிடும்.

தமது சொத்துக்களை விற்று மக்கள் சேவையில் ஈடுபடும் நேர்மையான அரசியல்வாதிகள், முதுமைக் காலத்தில் வாழ்வாதாரமின்றித் தவிக்கும் நிலை ஏற்படும். இது எதிர்காலத்தில் நேர்மையானவர்கள் அரசியலுக்கு வருவதைத் தடுக்கும்.

தன்னைப் போன்ற ஒரு சிலர் இந்த ஓய்வூதியத்தைத் தானதர்மங்களுக்குப் பயன்படுத்தினாலும், பெரும்பான்மையான முன்னாள் உறுப்பினர்கள் தமது அன்றாட வாழ்வாதாரத்திற்கு இதையே நம்பியுள்ளனர்.

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு வரும் நிலையில், ஜனநாயகத்தையும் சாதாரண மக்களின் பிரதிநிதித்துவத்தையும் பாதுகாக்கும் வகையில் ஒரு நடுநிலையான தீர்வை எட்ட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே இந்த ஓய்வூதிய ரத்து தொடர்பான வழக்கு உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், கரு ஜயசூரியவின் இந்தத் தலையீடு அரசியல் தளத்தில் புதிய விவாதத்தைத் தோற்றுவித்துள்ளது.

 

 

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...