இலங்கை மத்திய வங்கி வைத்திருந்த தங்க கையிருப்பில் ஏறக்குறைய பாதி விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பதிவிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தற்போது 382 மில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கத்தில் தற்போது 175.4 மில்லியன் டொலர் மதிப்புள்ள தங்கம் மட்டுமே கையிருப்பில் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் 500 மில்லியன் டொலர் கடன் தவணையை இலங்கை எவ்வாறு செலுத்தும் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
#SrilankaNews
Leave a comment