14 12
ஏனையவை

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடத்தப்பட்ட தங்கம் : இருவர் கைது

Share

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடத்தப்பட்ட தங்கம் : இருவர் கைது

இலங்கையில் (Sri Lanka)  இருந்து கடத்திச் செல்லப்பட்ட 4.5 கிலோ தங்கம் இந்தியாவின் (India) இராமேஸ்வரத்தில் (Rameswaram) மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்று (18) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இலங்கையில் இருந்து கடல் வழியாகக் குறித்த தங்கம் கடத்திச் செல்லப்பட்டுள்ளது.

இதையடுத்து, இராமேஸ்வரம் வழியாக வாகனம் ஒன்றில் வேறு இடத்திற்கு செல்ல முற்பட்ட போது அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

தங்கத்தை கடத்திச் சென்ற இருவரையும் இந்திய மத்திய அரசின் சுங்கத்துறையின் புலனாய்வு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

இதையடுத்து, மீட்கப்பட்ட தங்கத்தையும் கைது செய்தவர்களையும் மதுரைக்குக் (Madurai) கொண்டு சென்றுள்ளனர்.

மேலும், பிடிபட்ட தங்கத்தின் பெறுமதி  இலங்கை நாணயத்தில் பத்து கோடி ரூபா பெறுமதி எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 30
ஏனையவை

மின்சாரக் கட்டண உயர்வு: ஏப்ரல் 1 முதல் புதிய கட்டணங்கள் நடைமுறை!

இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைவாக, 2026 ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக்...

image 1200x800 43
ஏனையவை

உரிமம் இல்லாத சுற்றுலாப் பயணிகளுக்கு வாகனம் வழங்கத் தடை! – இலங்கை காவல்துறை அதிரடி உத்தரவு; மீறினால் உரிமையாளர்களுக்கும் சிறை!

செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாத வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு மோட்டார் வாகனங்களை வாடகைக்கு அல்லது குத்தகைக்கு...

UNSL800
ஏனையவை

பாலியல் வன்முறை திட்டமிட்ட ஒரு தாக்குதல்: ஐநா அறிக்கையை முன்வைத்து இலங்கை அரசுக்கு HRW கடும் அழுத்தம்!

இலங்கையின் உள்நாட்டுப் போர்க்காலத்தில் இடம்பெற்ற பாலியல் வன்முறைகள், அரச பாதுகாப்புப் படைகளால் ‘வேண்டுமென்றே மேற்கொள்ளப்பட்ட முறையான...

images 1 4
ஏனையவை

இதில் மேல் மாகாணத்தில் அதிகபட்சமாக 1,317 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இலங்கையில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின்...