14 12
ஏனையவை

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடத்தப்பட்ட தங்கம் : இருவர் கைது

Share

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடத்தப்பட்ட தங்கம் : இருவர் கைது

இலங்கையில் (Sri Lanka)  இருந்து கடத்திச் செல்லப்பட்ட 4.5 கிலோ தங்கம் இந்தியாவின் (India) இராமேஸ்வரத்தில் (Rameswaram) மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவமானது நேற்று (18) இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில், இலங்கையில் இருந்து கடல் வழியாகக் குறித்த தங்கம் கடத்திச் செல்லப்பட்டுள்ளது.

இதையடுத்து, இராமேஸ்வரம் வழியாக வாகனம் ஒன்றில் வேறு இடத்திற்கு செல்ல முற்பட்ட போது அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

தங்கத்தை கடத்திச் சென்ற இருவரையும் இந்திய மத்திய அரசின் சுங்கத்துறையின் புலனாய்வு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.

இதையடுத்து, மீட்கப்பட்ட தங்கத்தையும் கைது செய்தவர்களையும் மதுரைக்குக் (Madurai) கொண்டு சென்றுள்ளனர்.

மேலும், பிடிபட்ட தங்கத்தின் பெறுமதி  இலங்கை நாணயத்தில் பத்து கோடி ரூபா பெறுமதி எனத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
14 11 2025 819486 850x460
ஏனையவை

சந்தேகங்களை விடுத்து தேசத்தைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுங்கள் – ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அழைப்பு!

ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதை விடுத்து, நாட்டின் எதிர்காலத்திற்காக அனைவரும் தத்தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்ற...

MediaFile 7 1
ஏனையவை

மன்னார் கடற்றொழிலாளர்களுக்கு இழப்பீடு வழங்க ஜனாதிபதி துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்: கூட்டுறவுச் சங்கம் கோரிக்கை!

நாட்டில் ஏற்பட்ட புயல் மற்றும் வெள்ளம் காரணமாக மன்னார் மாவட்ட கடற்றொழிலாளர்களும் பாரிய பாதிப்புக்களைச் சந்தித்துள்ள...

images 8 2
ஏனையவை

கொழும்பு பெரஹர மாவத்த காணி 99 வருட குத்தகைக்கு விடுவிப்பு: முதலீட்டாளர்களைத் தெரிவு செய்ய அமைச்சரவை அனுமதி!

நகர அபிவிருத்தி அதிகாரசபைக்குச் (UDA) சொந்தமான கொழும்பு 03, கொள்ளுப்பிட்டி, பெரஹர மாவத்தையில் அமைந்துள்ள காணியைக்...

articles2FyEG6lrLYMw8L60exw5pH
ஏனையவை

காணி உரிமை வழங்கினால் மலையக வீட்டுப் பிரச்சினை தீரும் – ஜனாதிபதியிடம் ஜீவன் தொண்டமான் கோரிக்கை!

நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நுவரெலியா மாவட்டச் செயலகத்தில்...