தொழிற் சந்தையானது ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் : யாழ். அரசாங்க அதிபர்
இலங்கைஏனையவைசெய்திகள்

தொழிற் சந்தையானது ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் : யாழ். அரசாங்க அதிபர்

Share

தொழிற் சந்தையானது ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தும் : யாழ். அரசாங்க அதிபர்

ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பாக எமது மக்களுக்கு போதிய விளக்கமில்லாத நிலையுள்ளது, அவற்றிற்கு ஆலோசனை வழங்கும் தொழிற் சந்தையாக இது அமையும் என யாழ். மாவட்ட அரச அதிபர் சிவபாலசுந்தரன் தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு , விளையாட்டுத்துறை அமைச்சர் மனுஷ நாணயக்காராவின் ஏற்பாட்டில் “வடக்கின் ஒளிமயம்” எனும் தொனிப்பொருளில் இடம்பெறும் “Global fair 2023” நிகழ்வானது இன்று (15.07.2023) காலை 9.00 மணியளவில் யாழ். முற்றவெளி மைதானத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரின் பங்கேற்புடன் ஆரம்பமானது.

இந் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இளைஞர்களுக்கான தொழில் வாய்ப்பு
அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையிலுள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணக்கூடிய சந்தர்ப்பமாக மனித வளத்தை உலகிற்கு இட்டுச் செல்வதற்கான வாய்ப்பாக இத் தொழிற்சந்தை அமையவுள்ளதாக நேற்றைய கூட்டத்தில் வெளிநாட்டு தொழிற்துறை அமைச்சர் தெரிவித்தார்.

இங்குள்ள இளைஞர்கள் தொழில்வாய்ப்புக்களைத் தேடி வெளிநாடுகளுக்கு சென்றாலும் போதிய தொழிற்பயிற்சி, மொழிப்பயிற்சி, சட்ட ஆலோசனைகள் நிலை இல்லாத நிலையுள்ளது.

இவ்வாறானவற்றிற்கு இத் தொழிற்சந்தை மூலம் தீர்வு காண முடியும்.

அதேபோல் 1983 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஓய்வு பெற்றவர்கள் இன்றுவரை ஊழியர் சேமலாப நிதியைப் பெறாமலும், 1990ம் ஆண்டு காலப்பகுதியில் வேலையை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஊழியர் சேமலாப நிதி வழங்கப்படும் என்ற வாய்ப்பை பலர் அறியாமலுள்ளனர்.

இவ்வாறு ஊழியர் சேமலாப நிதியம் தொடர்பாக எமது மக்களுக்கு போதிய விளக்கமில்லாத நிலையுள்ளது அவற்றிற்கு ஆலோசனை வழங்கும் தொழிற் சந்தையாக இது அமையும்.

ஏனைய நான்கு மாவட்டங்களில் இத் தொழிற்சந்தை ஆரம்பிக்கப்பட்டாலும் யாழ்ப்பாணத்திலே இத் திட்டம் வெற்றியளித்துள்ளது.

எனவே வட பிராந்தியத்தில் தொழிற் பயிற்சி நிலையத்தை ஆரம்பிப்பதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் கூறியிருந்தார். அவருக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்

Share

1 Comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...