3 scaled
ஏனையவை

ரூ.40 ஆயிரத்துக்கு பதில் 4 லட்சத்தை அனுப்பிய கோயம்புத்தூர் முதலாளி! தப்பி ஓடிய வட மாநில தொழிலாளர்கள்

Share

ரூ.40 ஆயிரத்துக்கு பதில் 4 லட்சத்தை அனுப்பிய கோயம்புத்தூர் முதலாளி! தப்பி ஓடிய வட மாநில தொழிலாளர்கள்

40 ஆயிரம் ரூபாய் சம்பள பணத்திற்கு பதில் 4.6 லட்சத்தை முதலாளி மாற்றி அனுப்பியவுடன், பணத்துடன் தொழிலாளர்கள் தப்பியுள்ளனர்.

தமிழக மாவட்டமான கோயம்புத்தூர், கணபதி பகுதியில் பாஸ்கரன் என்பவர் கட்டுமான அலுவலகம் வைத்திருக்கிறார். இவரிடம், உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த சிவம் நாயக், பிரபாகரன் நாயக் ஆகிய இவர்கள் 4 வருடங்களுக்கும் மேலாக பணிபுரிந்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று முன்தினம் அவர்களுக்கு சம்பள பணத்தை பாஸ்கரன் அனுப்பியிருக்கிறார். அப்போது, சம்பள பணமான ரூ.40,000க்கு பதில் 4 லட்சத்தை சிவம் நாயக் கணக்கிற்கு தவறுதலாக அனுப்பியுள்ளார்.

இதனை அறிந்த பாஸ்கரன், உடனடியாக சிவம் நாயக்கை அழைத்து பணத்தை காலையில் வாங்கிக் கொள்வதாக கூறியுள்ளார்.

பின்னர், நேற்று தொழிலாளர்கள் தங்கியிருக்கும் கட்டட வேலை நடக்கும் இடத்துக்கு சென்று பாஸ்கரன் பார்த்துள்ளார். ஆனால், அந்த தொழிலார்கள் இருவரையும் காணவில்லை.

பின்னர், அவர் விசாரித்த போது தான் பணத்துடன் அவர்கள் இருவரும் நேற்று இரவே ஊருக்கு புறப்பட்டுச் சென்றது தெரியவந்துள்ளது.

உடனடியாக கோவை மாநகர சைபர் கிரைம் பொலிஸில் பாதிக்கப்பட்டவர் புகார் அளித்தார். பின்னர், அவர்களது வங்கிக்கணக்கு முடக்கப்பட்டது. இருந்தாலும், அவர்கள் அதற்குள் ரூ.1 லட்சம் பணத்தை எடுத்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இதுகுறித்து பாஸ்கரன் கூறுகையில், “இத்தனை நாட்களாக வேலை செய்துவிட்டு துரோகம் செய்ததை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என்று கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
25 69035b0d8bf92
இலங்கைஏனையவைசெய்திகள்

அவுஸ்திரேலியாவில் இலங்கை பௌத்த பிக்குக்கு சிறைத்தண்டனை விதிப்பு

அவுஸ்திரேயாவில் இலங்கையை சேர்ந்த பௌத்த துறவி ஒருவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக...

Weligama Chairman shooting
ஏனையவை

லசா கொலையில் புதுத் திருப்பம்: உடந்தையாக இருந்தது நெருங்கிய நண்பரே என அதிர்ச்சி தகவல்.

வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகர கொலையில் துப்பாக்கிதாரிக்கு உதவிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்,...

25 69020810f343e
ஏனையவை

கல்கிசை நீதிமன்று: அதிகாரிகளுக்கு அதிர்ச்சி அளித்த சிறைக்கைதியின் செயல்.

நீதிமன்றத்தின் வேண்டுகோளின் பேரில் இன்று (29) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தின் களஞ்சிய அறையை சுத்தம் செய்ய...

25 6852cf07dcfea
ஏனையவை

தேங்காய் விலை தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் சரிவு: இடைத்தரகர்களால் சந்தை விலை உயர்வு என குற்றச்சாட்டு

நாட்டில் வாராந்திர ஏலத்தில் தேங்காயின் சராசரி விலைகள் தொடர்ந்து மூன்றாவது வாரமாகச் 5 சதவீதம் சரிந்துள்ளதாக...