4 2 scaled
உலகம்செய்திகள்

செல்போனில் கேம் விளையாடிய 14 வயது சிறுவன்..தாய் கண்டித்ததால் எடுத்த விபரீத முடிவு

Share

செல்போனில் கேம் விளையாடிய 14 வயது சிறுவன்..தாய் கண்டித்ததால் எடுத்த விபரீத முடிவு

சென்னையில் 14 வயது சிறுவன் ஒருவன், செல்போன் கேம் விளையாடுவதை தாய் கண்டித்ததால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சென்னை ஜி.எஸ்.டி சாலையில் வசித்து வரும் தம்பதி சீனிவாச கிருஷ்ணகுமார் – சைனஜா. இவர்களது மகள் வைஷ்ணவி (20), மகன் ஸ்ரீராம் (14).

8ஆம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீராம், சமீப காலமாக படிப்பில் கவனம் செலுத்தாமல் செல்போன் கேமில் மூழ்கி இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் தாய் சைனஜா அவரை கண்டித்துள்ளார். அதனைப் பொருட்படுத்தாமல் நேற்று இரவும் சிறுவன் கேம் விளையாடியுள்ளார்.

மீண்டும் சைனஜா மகனை கண்டித்துவிட்டு தூங்க சென்றுள்ளார். இதன் காரணமாக மன விரக்தியடைந்த ஸ்ரீராம், வீட்டின் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார்.

அவரது அலறல் சத்தம் கேட்டு எழுந்த குடும்பத்தினர் மருத்துவமனையில் சிறுவனை அனுமதித்துள்ளனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

இதனையடுத்து சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Share
தொடர்புடையது
india 17
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பயணித்த அனைவரும் பலி

பாகிஸ்தான் ராணுவத்திற்குச் சொந்தமான ‘Mi-17’ ரக ஹெலிகாப்டர் ஒன்று, பாகிஸ்தான் நிர்வாகத்தின் கீழுள்ள காஷ்மீரின் முசாபராபாத்...

india 16
உலகம்செய்திகள்

சூரியப் புயல்களில் இருந்து பூமியைப் பாதுகாக்க விண்வெளியில் செயற்கை பிளாஸ்மா கவசம்: விஞ்ஞானிகள் புதிய திட்டம்

சூரியனில் இருந்து வெளியாகும் சக்திவாய்ந்த சூரியப் புயல்கள் (Solar Storms) மற்றும் புவிக்காந்தப் புயல்களினால் பூமியில்...

india 15
உலகம்செய்திகள்

போலி உரிமம் மூலம் 17 ஆண்டுகள் பயணிகள் விமானத்தை இயக்கிய ஏர் கனடா கேப்டன் கைது

ஏர் கனடா (Air Canada) விமான சேவை நிறுவனத்தில் போலி உரிம ஆவணங்களைப் பயன்படுத்தி, சுமார்...

india 13
அரசியல்இலங்கைசெய்திகள்

சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் குறித்து முறையான விசாரணை: நாடாளுமன்றத்தில் அமைச்சர் ஆனந்த விஜேபால உறுதி

கடந்த காலங்களில் நாட்டில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய மரணங்கள் மற்றும் மக்கள் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்கள் உள்ளிட்ட...